என் மலர்
நீங்கள் தேடியது "virus"
- நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
- இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
77 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்த நிலையில், நேற்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனும–திக்–கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், கொரோனா–வுக்கு சிகிச்சை பெற்று வந்த 53 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்–பட்டனர். மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு 520 பேர் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 26 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 67,789 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 194 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்திரிகளில் அனும–திக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
- மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.
சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாகவும், வெளிநாட்டில் உள்ள குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.
மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.