என் மலர்
நீங்கள் தேடியது "Visit"
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஊட்டி:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா, மூலிகை பண்ணை, ரெயில் நிலையம், படகு இல்லம், கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது.
ஊட்டி வெளிவட்டாரங்களில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. சீசன் காலங்கள், தொடர் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.
இதனால் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சீசன் இல்லாத காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடுங்குளிர் நிலவியது.
இதனால் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா மலர் பூங்கா, படகு இல்லம் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கமர்சியல், எட்டின்ஸ், சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பெருமளவு இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. தாவரவியல் பூங்காவில் மட்டும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.
ஆனால் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அடியோடு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 2 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இதனிடையே ஊட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடைகளை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து சென்றனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா, மூலிகை பண்ணை, ரெயில் நிலையம், படகு இல்லம், கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது.
ஊட்டி வெளிவட்டாரங்களில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. சீசன் காலங்கள், தொடர் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.
இதனால் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சீசன் இல்லாத காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடுங்குளிர் நிலவியது.
இதனால் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா மலர் பூங்கா, படகு இல்லம் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கமர்சியல், எட்டின்ஸ், சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பெருமளவு இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. தாவரவியல் பூங்காவில் மட்டும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.
ஆனால் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அடியோடு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 2 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இதனிடையே ஊட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடைகளை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து சென்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். #AmitShah #BJP
சென்னை:
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அமித்ஷா நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்.
நாளை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பொறுப்பாளரும், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தேசிய செயலாளர் குபேந்திர யாதவ் எம்.பி., மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (தமிழ்நாடு), சுவாமிநாதன் எம்.எல்.ஏ., (புதுச்சேரி) மற்றும் விஷால் ஜோலி (அந்தமான் நிகோபர் தீவு) உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
அதன்பிறகு 11.30 மணிக்கு அமித்ஷா, தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுக்கிறார். பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரையில் உள்ள அரங்கில் தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முன்தயாரிப்புக்கான கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு அரசியல் விவகார குழுவைச் சேர்ந்த 11 பேரிடம் 39 தொகுதிகள் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்த விவாத நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த கூட்டம் பகல் 2 மணி வரை நடக்கிறது.
பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை சங்க் பரிவார் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிக்கிறார்.
தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திப்பது குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 3 ஆயிரம் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும் விவாதிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வியூகம் வகுப்பது குறித்தும் அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை அந்தமான் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்ப நேரம் மாறுபட வாய்ப்பு உள்ளது. பின்னர் இரவு தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் (10-ந்தேதி) காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி அமித்ஷா சென்னை வந்தார். அதற்கு பிறகு கடந்த ஆண்டு மே 10 மற்றும் 11-ந்தேதிகளில் சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் கடந்த ஆகஸ்டு 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை, கோவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பயணமும் ரத்தானது. எனவே 1½ ஆண்டுக்கு பிறகு தற்போது அமித்ஷா சென்னை வருவது குறிப்பிடத்தக்கது. #AmitShah #BJP #tamilnews
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அமித்ஷா நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்.
நாளை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பொறுப்பாளரும், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தேசிய செயலாளர் குபேந்திர யாதவ் எம்.பி., மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (தமிழ்நாடு), சுவாமிநாதன் எம்.எல்.ஏ., (புதுச்சேரி) மற்றும் விஷால் ஜோலி (அந்தமான் நிகோபர் தீவு) உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
அதன்பிறகு 11.30 மணிக்கு அமித்ஷா, தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுக்கிறார். பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரையில் உள்ள அரங்கில் தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முன்தயாரிப்புக்கான கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு அரசியல் விவகார குழுவைச் சேர்ந்த 11 பேரிடம் 39 தொகுதிகள் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்த விவாத நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த கூட்டம் பகல் 2 மணி வரை நடக்கிறது.
பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை சங்க் பரிவார் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிக்கிறார்.
தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திப்பது குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 3 ஆயிரம் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும் விவாதிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வியூகம் வகுப்பது குறித்தும் அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை அந்தமான் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்ப நேரம் மாறுபட வாய்ப்பு உள்ளது. பின்னர் இரவு தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் (10-ந்தேதி) காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி அமித்ஷா சென்னை வந்தார். அதற்கு பிறகு கடந்த ஆண்டு மே 10 மற்றும் 11-ந்தேதிகளில் சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் கடந்த ஆகஸ்டு 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை, கோவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பயணமும் ரத்தானது. எனவே 1½ ஆண்டுக்கு பிறகு தற்போது அமித்ஷா சென்னை வருவது குறிப்பிடத்தக்கது. #AmitShah #BJP #tamilnews
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 2 நாள் அரசு முறை பயணமாக கோவா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
புதுடெல்லி:
கோவா மாநில பல்கலைகழகத்தின் 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை கோவா செல்ல உள்ளார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அடுத்து, மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், ஞாயிற்று கிழமை பாம் ஜீசஸ் தேவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
கோவா மாநில பல்கலைகழகத்தின் 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை கோவா செல்ல உள்ளார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அடுத்து, மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், ஞாயிற்று கிழமை பாம் ஜீசஸ் தேவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை காலை புதுவை வருகிறார்.
புதுச்சேரி:
துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக் கிழமை) காலை புதுவை வருகிறார்.
காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக் கழகத்துக்கு செல்லும் அவர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் லாஸ் பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
புதுவைக்கு நாளை வரும் வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக் கிழமை) காலை புதுவை வருகிறார்.
காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக் கழகத்துக்கு செல்லும் அவர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் லாஸ் பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
புதுவைக்கு நாளை வரும் வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.#KamalHaasan #MakkalNeethiMaiyam
சென்னை:
பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘மீனவர்களை இடம் மாற சொல்வது சரியல்ல’ என அவர் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு மண் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
கடல் அலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் சொல்ல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மய்யம் விசில் செயலியில் இதுதொடர்பான செய்தியை தாமதமாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நான் ஒரு நடிகனாக ஸ்டூடியோ அருகில் இருக்க ஆசைப்படுவேன்.
விவசாயி, வயல்வெளி அருகில் வசிக்க ஆசைப்படுவார். மீனவர்கள், கடற்கரை அருகில் இருக்க தான் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் காஞ்சீபுரத்தில் கொடுத்தால், அவர்கள் எப்படி மீன்பிடிக்க இங்கு வருவார்கள்?.
கடலுக்கு அருகில் இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களை இடம் மாற்றுவது, தொழிலை மாற்றுவதற்கு சமம். மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற சொல்வது சரியல்ல. இதற்கென தனித்துறை இருக்கிறது. அந்த துறை இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam #Tamilnews
பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘மீனவர்களை இடம் மாற சொல்வது சரியல்ல’ என அவர் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு மண் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
கடல் அலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் சொல்ல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மய்யம் விசில் செயலியில் இதுதொடர்பான செய்தியை தாமதமாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நான் ஒரு நடிகனாக ஸ்டூடியோ அருகில் இருக்க ஆசைப்படுவேன்.
விவசாயி, வயல்வெளி அருகில் வசிக்க ஆசைப்படுவார். மீனவர்கள், கடற்கரை அருகில் இருக்க தான் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் காஞ்சீபுரத்தில் கொடுத்தால், அவர்கள் எப்படி மீன்பிடிக்க இங்கு வருவார்கள்?.
கடலுக்கு அருகில் இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களை இடம் மாற்றுவது, தொழிலை மாற்றுவதற்கு சமம். மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற சொல்வது சரியல்ல. இதற்கென தனித்துறை இருக்கிறது. அந்த துறை இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam #Tamilnews
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்பு அதிகாரி பாலாஜி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் அவர் இரவு தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தின்போது திருப்பதி பா.ஜ.க. பிரமுகர் பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்பு அதிகாரி பாலாஜி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் அவர் இரவு தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தின்போது திருப்பதி பா.ஜ.க. பிரமுகர் பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களுடன் ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைக்கிறார். #PMModi #Chhattisgarh
ராய்ப்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து நாளை காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.
பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.
அங்கிருந்து பிலாய் நகருக்கு செல்லும் மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப்பணிகளை துவக்கி வைப்பதுடன், இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.
பிலாய் ஐ.ஐ.டி.க்கான புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் பின்னிரவு டெல்லி திரும்புகிறார். #PMModi #Chhattisgarh
பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து நாளை காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.
பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.
அங்கிருந்து பிலாய் நகருக்கு செல்லும் மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப்பணிகளை துவக்கி வைப்பதுடன், இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.
பிலாய் ஐ.ஐ.டி.க்கான புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் பின்னிரவு டெல்லி திரும்புகிறார். #PMModi #Chhattisgarh
துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளார். அங்கு, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என தெரிகிறது. #ThoothukudiFiring #CMVisitsThoothukudi
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், முதல்வர் எடபப்டி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்று தெரிகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்தார். அவர் சென்னை திரும்பியதும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiFiring #CMVisitsThoothukudi
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், முதல்வர் எடபப்டி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்று தெரிகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #Thoothukudi $SterliteProtest #ActorVijay
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்றும், தொலைபேசி மூலமாகவும், டுவிட்டரிலும் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் தொலைபேசி மூலமாக நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
எனினும், நேற்று இரவு 8.10 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு சென்று கருணாநிதியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. உடன் இருந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெளியில் வந்தபோது, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி மட்டுல்லாமல் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டவர் கருணாநிதி. நமது காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மூத்த அரசியல் தலைவரான அவருக்கு நேற்று(நேற்று முன்தினம்) கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அவருக்கு விரும்பி வாழ்த்து கூற வந்தேன். கடந்த முறையை விட இந்த முறை கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருடைய சந்தோஷத்தை தனது முகத்தில் காண்பித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்றும், தொலைபேசி மூலமாகவும், டுவிட்டரிலும் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் தொலைபேசி மூலமாக நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
எனினும், நேற்று இரவு 8.10 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு சென்று கருணாநிதியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. உடன் இருந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெளியில் வந்தபோது, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி மட்டுல்லாமல் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டவர் கருணாநிதி. நமது காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மூத்த அரசியல் தலைவரான அவருக்கு நேற்று(நேற்று முன்தினம்) கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அவருக்கு விரும்பி வாழ்த்து கூற வந்தேன். கடந்த முறையை விட இந்த முறை கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருடைய சந்தோஷத்தை தனது முகத்தில் காண்பித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். #BanwarilalPurohit
சென்னை:
2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மாநாட்டை தொடர்ந்து அவர் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.
இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாடு முடிந்த பின்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கவர்னர் பன்வாரிலால் புரோகித் திட்டமிட்டு இருக்கிறார்.
முன்னதாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொலைபேசியில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்தாலும், அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. அதேபோல சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக் கிறது.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விரிவாக ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. #BanwarilalPurohit
2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மாநாட்டை தொடர்ந்து அவர் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.
இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாடு முடிந்த பின்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கவர்னர் பன்வாரிலால் புரோகித் திட்டமிட்டு இருக்கிறார்.
முன்னதாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொலைபேசியில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்தாலும், அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. அதேபோல சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக் கிறது.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விரிவாக ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. #BanwarilalPurohit
குற்றால அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது
தென்காசி:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கும். இதை தொடர்ந்த ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழும்.
குற்றால சீசனையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே சீசனுக்கான அறிகுறி காணப்பட்டது. கடந்த வாரம் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்தது.
மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை அறிந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வந்தனர். அருவிகளில் தண்ணீர் விழத்தொடங்கியதால் சீசன் தொடங்கி விட்டதாக சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இன்று காலை குற்றாலத்தில் குறைவாக தண்ணீர் விழுந்தாலும் இதமான தட்பவெப்பநிலை காணப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகளின் கூட்டமும் அதிகமாகவே காணப்படுகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கும். இதை தொடர்ந்த ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழும்.
குற்றால சீசனையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே சீசனுக்கான அறிகுறி காணப்பட்டது. கடந்த வாரம் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்தது.
மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை அறிந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வந்தனர். அருவிகளில் தண்ணீர் விழத்தொடங்கியதால் சீசன் தொடங்கி விட்டதாக சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இன்று காலை குற்றாலத்தில் குறைவாக தண்ணீர் விழுந்தாலும் இதமான தட்பவெப்பநிலை காணப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகளின் கூட்டமும் அதிகமாகவே காணப்படுகிறது.