search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவை தொடக்கம் - பிரதமர் மோடி நாளை சத்தீஸ்கர் பயணம்
    X

    ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவை தொடக்கம் - பிரதமர் மோடி நாளை சத்தீஸ்கர் பயணம்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களுடன் ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைக்கிறார். #PMModi #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து நாளை காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

    அங்கிருந்து பிலாய் நகருக்கு செல்லும் மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப்பணிகளை துவக்கி வைப்பதுடன், இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.

    பிலாய் ஐ.ஐ.டி.க்கான புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் பின்னிரவு டெல்லி திரும்புகிறார். #PMModi #Chhattisgarh

    Next Story
    ×