என் மலர்
நீங்கள் தேடியது "visually impaired"
- பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டாக்ஸ், டெய்சி, இ-பப், பி.டி.எப்., எச்.டி.எம். ஆகியவற்றை எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.
- மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டுநகல், யு.டி.ஐ.டி. ஸ்மார்ட் கார்டு நகல், கல்விபடிக்கும் சான்று நகல், பாஸ்போர்ட் புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.
இந்த கருவியில் இன்டர்நெட் ரேடியோ, யு.எஸ்.பி. பென் டிரைவ் மற்றும் எஸ்.டி.கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு, வைபை தவிர செல்போன் ஹாட்ஸ்பாட்டுடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள், ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டாக்ஸ், டெய்சி, இ-பப், பி.டி.எப்., எச்.டி.எம். ஆகியவற்றை எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டுநகல், யு.டி.ஐ.டி. ஸ்மார்ட் கார்டு நகல், கல்விபடிக்கும் சான்று நகல், பாஸ்போர்ட் புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெற விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
- தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.
இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.
2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.
3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.
4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.
5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.
7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.
8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.
பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.
- நீதித்துறை பணிக்கான ஆள்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான பாரபட்சத்தையும் சந்திக்கக்கூடாது.
- தகுதி இருக்கும்பட்சத்தில் காலிப்பணியிடங்களில் அவர்களை நியமிக்கலாம்.
புதுடெல்லி:
1994-ம் ஆண்டின் மத்தியபிரதேச அரசு பணியாளர் தேர்வு விதிமுறைகளின் 6ஏ மற்றும் 7 விதிகள், பார்வைக்குறைபாடு கொண்டவர்களும், குறைந்த அளவு பார்வை கொண்டவர்களும் நீதித்துறை பணியில் சேருவதற்கு தடை விதிக்கின்றன.
எனவே, அந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சில மாநிலங்களில், பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டும் தானாக முன்வந்து ஒரு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதுபோல், விசாரிக்கப்பட்ட 6 மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இவ்வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு எதிரான மத்தியபிரதேச அரசு பணியாளர்கள் தேர்வு விதிமுறைகளின் சில விதிகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
தீர்ப்பில் நீதிபதி ஆர்.மகாதேவன் கூறியிருப்பதாவது:-
நீதித்துறை பணிக்கான ஆள்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான பாரபட்சத்தையும் சந்திக்கக்கூடாது. எனவே, அவர்களையும் சேர்ப்பதை உறுதிசெய்யும்வகையில், மாநில அரசுகள் உடன்பாடான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்-ஆப் மூலமாகவோ, அல்லது வேறு தடைக்கல் மூலமாகவோ மாற்றுத்திறனாளிகளை விலக்கும்வகையில் மறைமுகமாக பாரபட்சம் காட்டினால், சமத்துவத்தை உறுதி செய்ய கோர்ட்டு தலையிட வேண்டும்.
மாற்றுத்திறன் காரணமாக எந்த விண்ணப்பதாரருக்கும் பணிவாய்ப்பை பரிசீலிப்பதை மறுக்கக்கூடாது. பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு நீதித்துறை பணியில் சேரும் வாய்ப்பை மறுக்கக்கூடாது.
இந்த உத்தரவு காரணமாக, நீதித்துறை ஆள்தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், அப்பணிக்கு பரிசீலிக்கப்பட உரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். தகுதி இருக்கும்பட்சத்தில் காலிப்பணியிடங்களில் அவர்களை நியமிக்கலாம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- புதுவையில் பார்வையற்றோர்கள் ஒன்றிணைந்து பார்வையற்றோருக்கான புதுவை உதவும் இதயங்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அன்னே சல்லிவன் பெயரை கொண்ட வாசிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
- திறப்பு விழாவுக்கு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார்
புதுச்சேரி:
புதுவையில் பார்வையற்றோர்கள் ஒன்றிணைந்து பார்வையற்றோருக்கான புதுவை உதவும் இதயங்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அன்னே சல்லிவன் பெயரை கொண்ட வாசிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண் முன்னிலை வகித்தார். மையத்தின் தலைவர் கிறிஸ்டோபர் பிரசாந்த், முன்னாள் தலைவர் சதீஷ்குமார், பி.எஸ்.என்.எல். அனிதா, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியைகள் சந்தானலட்சுமி, கல்பனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர்கள் ஜெயக்குமார், விஜயபிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் நிர்வாக உறுப்பினர்கள் தீனா, சந்தோஷ், சுபாஷ், வினோத், முகேஷ், ராம்பிரசாத், ஹரினி, தர்ஷிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வாசிப்பு மையத்தில் பார்வையற்றோருக்கு அனைத்து வசதிகளும், அதற்கு தேவையான புத்தகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.