என் மலர்
நீங்கள் தேடியது "vomit"
- கிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர்.
- அரசு பள்ளியில் தாசில்தார், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 460 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று பள்ளியில் பணியில் இருந்த சத்துணவு அமைப்பாளர் கோசலை மற்றும் உதவியாளர்கள் அருக்காணி, கிருஷ்ண வேணி ஆகியோர் மதிய உணவாக சாதம், சாம்பார், முட்டை ஆகியவை தயார் செய்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்த 260 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
மதியம் 1.30 மணிக்கு மதிய உணவு சாப்பிட்ட 8-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் (வயது13), அபிநவ் (13), 7-ம் வகுப்பு படிக்கும் சபீர் அகமது (12), கவின் பிரசாத் (12), ஜீவா(12), மாடசாமி (12), லோகேஷ் (12), கிஷோர் (12), சுந்தரேசன் (12), முகமது சமீர் (12), ஈஸ்வரன் (12), 6-ம் வகுப்பு படிக்கும் தினேஷ் (12), அஸ்வின் (11),செய்யது அகமது (11), ரித்தீஷ் (11) ஆகிய 15 மாணவர்களுக்கு வயிற்று போக்குடன் வாந்தி ஏற்பட்டது.
வாந்தி எடுத்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தர்மராஜ் ஆசிரியர்கள் உதவியுடன் மீட்டு ஆட்ேடாவில் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வாந்தி எடுத்த மாணவர்களின் லோகேஷ், சபீர் அகமது, முகமது சபீர் ஆகியோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கிடைத்ததும் வால்பாறை டி.எஸ்.பி. கீர்த்திவாசன், ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவர்களை சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். 3 மாணவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உல்ஃப் பிளிட்சர் என்பவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
- பரபரப்பான சூழல் ஏற்பட்டு, நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
பிரபல ஆங்கில செய்தி சேனலான சி.என்.என். சேனலின் நேரலையின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பிரபல ஆங்கில செய்தி ஊடகமான சி.என்.என். சேனல், 33 ஆண்டுகளாக 'தி சிட்டியேஷன் ரூம்' என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியை கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக உல்ஃப் பிளிட்சர் என்பவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், 75 வயதான பிளிட்சர், கடந்த வியாழனன்று நடந்த 'தி சிட்டியேஷன் ரூம்' நிகழ்ச்சி நேரலையின் போது திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு, நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
கடந்த வியாழனன்று டொனால்டு டிரம்ப்பால் கொலோராடாவில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பேச ராஸ்கின் அவர்களை 'தி சிட்டியேஷன் ரூம்' நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியை பிளிட்சர் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார். அப்போது, நிகழ்ச்சி முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், பிளிட்சரின் கேமராவை கட் செய்தனர்.
காரணம், பிளிட்சர் அவர்களின் உடல்நிலை மிக மோசமாக மாறி, நேரலையின் போதே பிளிட்சர் வாந்தி எடுத்துவிட்டார். நீண்ட நேரமாக வாந்தியை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அவரால் கடைசி நிமிடங்களில் கட்டுப்படுத்த இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. அதனால், நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து மீண்டும் வேறொரு தொகுப்பாளருடன் நிகழ்ச்சி தொடங்கியது.
நேரலையின்போது வாந்தியை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த பிளிட்சரின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பரவ ஆரம்பித்தவுடன், அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியதோடு, அவர் உடல்நலம் சீராகி மீண்டு வரவேண்டும் என்று அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை டேக் செய்து பதிவிட்டு வந்தனர்.
தன் உடல் நிலை குறித்து தன் ரசிகர்களும், நலம் விரும்பிகளும் கேட்டதையடுத்து, அவர்களின் கவலையை புரிந்துக் கொண்ட பிளிட்சர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "நான் நலமாக இருக்கிறேன்! என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றிகள். நான் உங்களை மீண்டும் 'தி சிட்டியேஷன் ரூம்' -இல் சந்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர்.
- அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விழுப்புரம்:
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். அவரது மகன் ஆண்டனி சாங் கோசன் (வயது 14). அதே பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆண்டனி சாங் கோசன் தாய் பொற்செல்வி,சகோதரி அனுசியா உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர். அந்த ஹோட்டலில் ஆண்டனி ஜான் கோசன் குளிர்பானம் குடித்துள்ளான். குளிர்பானம் குடித்த பின்னர் 4 முறை வாந்தி எடுத்துள்ளான்.
அவரது தாய் பொற்செல்வி பார்த்து பஸ்சில் சென்று வருவதால் இப்படி இருக்கும் என்று நினைத்து பின்னர் மயக்க நிலையில் இருந்த ஆண்டனி ஜான் கோசனை தூங்க வைத்துள்ளனர். பின்னர் பஸ் திண்டிவனம் வந்தது. பொற்செல்வி பஸ்சில் மகன் ஆண்டனிஸ் ஜான் கோசனை எழுப்பினார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்செல்வி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆண்டனி ஜான் கோசனை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திண்டி வனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் எந்த காரணத்தினால் இறந்தான் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.