என் மலர்
நீங்கள் தேடியது "WAQF"
- மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
ஒரு கும்பல், அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. மேலும் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. நிம்ரிட்டா ரெயில் நிலையமும் சூறையாடப்பட்டது. ஜாங்கிபூர் பகுதியில் ஒரு கும்பல் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான கலிலுர் ரகுமான் அலுவலகத்தை சூறையாடியது.
முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. வன்முறையில் 2 பேர் பலியானதாகவும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார்.
ஜாங்கிபூரி ல் அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில் போராட்டம் பரவியது.
மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (சுமார் 500 பேர்) மேற்கு வங்காளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதா பாத், சுதி, அம்தாலா, துலியன் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு பிரிவினர் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர்.
நிம்நிதா ரெயில் நிலையத்தில் அவர்கள் பல மணி நேரம் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ரெயில் மீது சரமாரியாக கற்களையும் வீசினார்கள். ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார்கள். இதையடுத்து வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் 10 போலீசார் படுகாயம் அடைந்தனர். சில ரெயில் பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.
இந்த வன்முறையால் அப்பகுதி வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் திருப்பி விடப்பட்டது. சர்வ தேச எல்லையில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- 8 கிராமங்களில் பெரும்பாலான சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என கடிதம் எழுதப்பட்டுள்ளது
- வாரியக் கடிதத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு துறையை சேர்ந்த 12 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ஏ.பி.ரபியுல்லா கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதம் தற்போதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில்,
திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பங்குளம், பெரியநாயகி சத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை, சித்தாநத்தம், கோமாகுடி, மணமேடு, பாகனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை. வக்பு வாரியத்தின் தடையின்னை சான்று பெறாமல், இங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, மடமானம் வைக்கவோ பத்திரப்பதிவு துறை அனுமதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு, தென்னூர், கிழக்குறிச்சி, அபிஷேகபுரம், குவளக்குடி, திருமலை சமுத்திரம் (ஓலையூர்), கும்பக்குடி, அரசங்குடி, செங்குளம், சோமரசம் பேட்டை, சிக்கத்தம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகுதியாக சில சர்வே எணகளில் உள்ள நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட பட்டுள்ள சர்வே எண்களுக ்குட்பட்ட நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ, பரிமாற்றம் செய்யவோ இயலாத நிலைக்கு நில உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், ஒரு கிராமத்தில் ஓரிரு சர்வே எண்கள் வேண்டுமானால், வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்கலாம்.ஆனால் முழு கிராமமே எப்படி வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.
இது குறித்து வக்பு வாரிய அதிகாரிகள் கூறும்போது, முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த ராணிமங்கம்மாள், பாண்டியமன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் இந்த நிலங்களை முஸ்லிம்களுக்கு இனாமாக த ந்துள்ளனர். அதற்குரிய செப்புப்பட்டயங்கள் உள்ளன.
இது குறித்து 1954-ம் ஆண்டில் இந்திய அரசு அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள வக்பு வாரியத்துக்குரிய நிலங்களின் பட்டியல் தான் பதிவுத்துறைக்கு னுப்பப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துகளை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இதேபோன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.