என் மலர்
நீங்கள் தேடியது "Waqf Board Amendment bill"
- சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கின்றன.
- விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முற்சிக்கின்றன.
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு "வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசாங்கம் முழுமையாக நிலையில் தயாராக உள்ளது. சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், அதன் விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முயல்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் விடுமுறை முடிவடைந்து நாளை பாராளுமன்றம் கூடுகிறது. இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக வேண்டுமென்றால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
மசோதா தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்த மசோதா முதலில் மக்களவையில் அறிமுக்கப்படுத்தப்படும்.
இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, முஸ்லிம்களுக்கு நலனுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மக்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா முன்மொழியப்பட்டது. பின்னர் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழு பல்வேறு திருத்தங்கள் செய்தது. திருத்தம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையான இன்று இந்த மசோதாவில் உள்ள பரிந்துரைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் கருப்புப் பட்டை அணிய வேண்டும் என தூண்டுவது நாட்டிற்கு நல்லதல்ல.
எதிர்க்கட்சிகள் இந்த மனுவில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து, அரசுடன் விவாதங்களில் ஈடுபட வேண்டும். என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளில் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியில் உள்ள பல எம்.பி.க்களும், இந்த மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளளனர்.
இந்த மசோதா பெரும்பாலான முஸ்லிம்களின் நலத்திற்கானது. வக்ஃபு வாரிய சொத்துகளை சுய நலத்திற்காக சுரண்டும் சில தலைவர்களுக்கு எதிரானது. கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வா கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
- மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிகிறார்.
- வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த பல்வேறு நிறுத்தங்களில் 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயாரானது.
இதற்கு கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.
கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சிறுபான்மையினரின் மத உரிமைகளை பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
- மசோதா அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
- மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.
இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.
அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது.
அதுமட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.
வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
- டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
அந்த வகையில் இன்றும் இந்த குழுவின் கூட்டம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அசாதுதின் ஒவைசி, ஆம் ஆத்மி பிரதிநிதி சஞ்சய் சிங், திமுகவின் முகமது அப்துல்லா, காங்கிரஸின் நசீர் உசேன், முகமது ஜாவேத், சமாஜ்வாதி கட்சியின் மொஹிபுல்லா நட்வி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்..
இந்த கூட்டத்தில் டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இது மற்ற உறுப்பினர்களுக்கு பகிரப்பட்ட நிலையில் அதை படித்தவுடன் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், அஸ்வினி குமார் தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு அம்சங்கள் இதில் இல்லை. டெல்லி அரசுக்குத் தெரியாமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தே வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
- முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு இன்று [ஜனவரி 29] ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது.
இது முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனைத்தொடர்ந்து இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். பலமுறை கூடிய கூட்டுக்குழு அமளியிலேயே கழிந்தது. மொத்தம் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அதில் 14 ஏற்கப்ட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் திருத்தியமைக்கப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பேசுகையில், பெரும்பான்மையுடன் வரைவு மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்கங்கள் கொண்ட கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தோம். நாளை இதை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
- வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது.
இது முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். பலமுறை கூடிய கூட்டுக்குழு அமளியிலேயே கழிந்தது. மொத்தம் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அதில் 14 ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
இதற்கிடையே, திருத்தி அமைக்கப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பேசுகையில், பெரும்பான்மையுடன் வரைவு மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்கங்கள் கொண்ட கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தோம். இதை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற கூட்டுக்குழுவினர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் வக்பு வாரிய திருத்த மசோதாவை சபாநாயகரிடம் வழங்கினர்.
- தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
- பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
வக்ஃபு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மெளனம் காப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
வக்ஃபு வாரிய சொத்துக்கள் என்பது இஸ்லாமியப் பெரியவர்கள் அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இறை இல்லங்களை எழுப்பி வழிபாடு செய்வதற்காகவும், சமூக நலத் தொண்டுகளுக்காகவும் இறைவனுக்காக கொடுக்கப்பட்ட அர்ப்பணிப்பு சொத்துக்களாகும்.
இந்த சொத்துக்களை பயன்படுத்தும் முழு உரிமையும் இஸ்லாமிய சமூகத்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்றாலும், அதனை தனிப்பட்டவர்கள் உரிமை கூட கொண்டாட எவ்வித அனுமதியும் இல்லை. அதனால், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024, வக்ஃபு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதற்கெதிராக நாடு முழுவதும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த சட்டத் திருத்தம் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், அந்த ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானதுதான்.
எனவே, மத்திய அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.
- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவம் நிலையில், இது தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.
கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வுகள் துவங்க இருக்கிறது. அந்த வகையில், இன்று பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதாவில் 14 திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், கூட்டுக்குழு அறிக்கையை ஜெகதாம்பிகா பால் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தார். இந்த கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சூழலில் இன்று வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் ஜனாதிபதி உரைக்கு பதிலளிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும்.
- இந்த மசோதாவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரித்து விட்டது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முறைப்படுத்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு, பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்கள் தெரிவித்த 14 திருத்தங்கள் ஏற்றுக் கொண்டு, எதிர்க்கட்சியினரின் 44 திருத்தங்களை நிராகரித்தது. இறுதியாக, 655 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், அதற்குக் குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவும், 11 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். பின்னர், பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அசாதுதீன் ஓவைசி, "அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். தற்போதைய சூழலில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தால் நாட்டில் சமூக நிலையற்ற தன்மையை ஏற்படும். இந்த மசோதாவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிராகரித்து விட்டது"
"நீங்கள் இந்தியாவை 'விக்சித் பாரத்' ஆக்க விரும்புகிறீர்கள், எங்களுக்கு 'விக்சித் பாரத்' வேண்டும். இந்த நாட்டை 80கள் மற்றும் 90களின் முற்பகுதிக்கு மீண்டும் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள், அது உங்கள் பொறுப்பு. இது எனது சொத்து, யாராலும் கொடுக்கப்படவில்லை. அதை நீங்கள் என்னிடமிருந்து பறிக்க முடியாது. வக்பு என்பது எனக்கு ஒரு வழிபாட்டு முறை என்று கூறினார்.
- வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஏற்கப்பட்டது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இதனையடுத்து பாராளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அவசரம் அவசரமாக விவாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாக கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஏற்கப்பட்டது.
இதையடுத்து வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். இதனால் மாநிலங்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
- அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வக்வு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணித்த பாராளுமன்ற கூட்டுக்குழு இறுதியாக கடந்த மாதம் பாட்னா, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய 3 நகரங்களிலும் கருத்துகளை கேட்டது. அதனை கூட்டுக்குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட கால அவகாசம் முடியும் முன்பே பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் சட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய எதிர் கருத்துகளை குழுத்தலைவர் நீக்கியுள்ளது குறித்து சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது அரசு சார்பில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து 150-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் குரல் எழுப்பினோம்.
இந்த நிலையில், நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கருத்துகள் நீக்கப்படவில்லை என மாநிலங்களவையில் பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி பேசியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் மத்திய அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது.
அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார். அப்படியானால் நீக்க உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மசோதா, பாராளுமன்றத்தில் மசோதா விவாதத்துக்கு வரும்போது கடுமையாக எதிர்ப்போம். மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். அதன் மூலம் மசோதாவை தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.