என் மலர்
நீங்கள் தேடியது "watchman killed"
- கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெயில்முத்து காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- கரிசல்குளம் விலக்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது லாரி பின்னால் மோதியது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த வர் வெயில்முத்து (வயது 42). இவர் கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
லாரி மோதல்
இந்நிலையில் இன்று காலை வெயில்முத்து டிராக்டரில் எம்சான்ட் மணல் ஏற்றிக்கொண்டு கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து நெல்லைக்கு வந்த லாரியை வண்ணார்ப்பேட்டையை சேர்ந்த முருகன் (45) என்பவர் ஓட்டி வந்தார். கரிசல்குளம் விலக்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது லாரி பின்னால் மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து வெயில்முத்து சம்பவ இடத்தில் பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கயத்தாறு இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன் சென்று பலியான வெயில்முத்து வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உயிரிழந்த வெயில்முத்துக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
வாலாஜா:
ஆற்காடு அருகே உள்ள வளவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 51). இவர் மாந்தாங்கலில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முருகானந்தம் நேற்று இரவு வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் மாந்தாங்கலுக்கு சென்றார். அங்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகானந்தம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.