search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wayanad Landslide"

    • குடும்பங்களில் பெரியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும்.
    • நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவர 400க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன.

    இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

    வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல்) நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும் என்றும், இந்த நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி உதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
    • வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும்.

    வயநாடு:

    நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை மந்திரி சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்' என தெரிவித்தனர்.

    நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர்கள், இதற்காக அரசு குடியிருப்பு உள்பட 125 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தனர்.

    வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறினர்.

    • சிறுவர்-சிறுமிகள் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.
    • நிவாரண நிதி திரட்டுவதற்காக பரதநாட்டியம் ஆடிய சிறுமி.

    திருவனந்தபுரம்:

    வயநாடு நிலச்சரிவு 400-க்கும் மேற்பட்ட வர்களை பலி வாங்கியிருப்பது மட்டுமின்றி, அங்கு பெருத்த சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துபோகின. அங்கிருந்த வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டன.

    சேத மதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் பொது மக்கள் நிவாரண நிதி வழங்குமாறு முதல்-மந்திரி பினராய் விஜயன் கேட்டுக்கொண்டார்.

    அதனடிப்படையில் பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் பள்ளி படிக்கும் சிறுவர்-சிறுமிகள் பலர் தாங்கள் சேமித்துவரும் உண்டியல் பணத்தைக்கூட நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்கள்.

    குழந்தைகளின் இந்த செயல் அனைவரும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. சென்னையை சேர்ந்த ஒரு சிறுமி, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டு வதற்காக 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். சென்னையை சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணிஸ்ரீ. பள்ளி மாணவியான அவர் பரதநாட்டியம் படித்து வருகிறார்.

    அந்த சிறுமி தான், வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். அந்த நிகழச்சியின் மூலம் கிடைத்த பணம் மற்றும் தனது சேமிப்பு பணம் ரூ.15 ஆயிரத்தை கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார். அந்த பணத்தை சிறுமி ஹரிணிஸ்ரீ, கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் நேரில் வழங்கினார்.

    நிவாரண நிதி திரட்டுவதற்காக பரதநாட்டியம் ஆடிய சிறுமி ஹரிணிஸ்ரீயை முதல்-மந்திரி பினராய் விஜயன் பாராட்டினார். இதேபோன்று ஏராளமான சிறுவர்-சிறுமிகள் தங்களின் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.

    அவ்வாறு நிதியுதவி வழங்க திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு வந்த கேரளாவை சேர்ந்த வைதேகி என்ற பள்ளி மாணவியை, நடிகர் சிரஞ்சீவி அங்கு வைத்தே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.
    • வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டது.

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது.

    வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு-தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். ராணுவ அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    மீட்பு பணிகளில் ஈடுபட்டு திரும்பும் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு வாசிகள் கைத்தட்டி உற்சாகம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    • சிறப்பு குழுவினர் இன்று காலை பள்ளத்தாக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி இன்று 10-வது நாளை எட்டியிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டியதால் கடந்த 30-ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக அழிந்தது.

    அட்டமலை, புஞ்சிரி மட்டம், வெள்ளரி மலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலச்சரிவு மற்றும் காட்டாற்றுவெள்ளம் காரணமாக வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

    இந்த பயங்கர சம்பவத்தில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள், மருத்துவ குழுவினர் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து ஈடுபட்டார்கள்.

    இந்த தேடுதல் பணி நேற்று 9-வது நாளாக நீடித்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. மேலும் மாயமாகியிருக்கும் நூற்றுக்கும் அதிகமானவர்களை தேடும் பணி தொடர்ந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், சாலியாறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள், வனத்துறையினர், மீட்பு குழுவினர் என 12 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்.

    அவர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தேடினார்கள். அதில் மேலும் சில உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதனால் வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்தது.

    பள்ளத்தாக்கு பகுதியில் மேலும் பல உடல்கள் கிடக்கலாம் என்று கருதப்படுவதால் அங்கு 3-வது நாளாக தேடுதல் பணி இன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு குழுவினர் இன்று காலை பள்ளத்தாக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

    அவர்கள் கடந்த 2 நாட்களாக தேடிய இடங்களை தவிர, பிற பகுதிகளுக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். அவர்கள் இன்று மோப்ப நாய்களையும் அழைத்துச் சென்று வனப்பகுதியில் தேடினர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி இன்று 10-வது நாளை எட்டியிருக்கிறது.

    சிறப்பு குழுவினர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், மீட்பு குழுக்களை சேர்ந்த மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள், சாலியாறு மற்றும் வனப்பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் பட்டியலை கேரள அரசு நேற்று வெளியிட்டது.

    அதில் 138பேர் இடம்பெற்றிருந்தனர். காணாமல் போயிருப்பவர்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களது பெயர், முகவரி மற்றும் புகைப்படம் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நிபுணர் குழுவினர் சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர்.
    • கட்டிட சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கி ருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    மேலும் நூற்றுக்கணக் கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வீடு, நகைகள், பணம், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துவிட்டனர். இந்த நிலச்ச ரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் அழிந்துவிட்டன.

    சேதமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கருதப்படுகிறது. நிலச்ச ரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்காக அரசுக்கு ரூ1,000 கோடி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் வழங்கும் நிவாரண நிதி மற்றும் அரசு ஊழியர்கள் வழங்கும் சம்பள தொகை மூலமாக ரூ500 கோடி வரை கிடைக்கும் என அரசு கருதுகிறது. மீதி தொகையை எவ்வாறு திரட்டுவது? என்று அரசு ஆலோ சித்து வருகிறது.

    வயநாடு நிலச்சரிவில் காணாமல்போனவர்களை தேடும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மறு வாழ்வு பணிகளை அரசு மேற்கொள்ளும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டி ருக்கிறது.

    நிலச்சரிவால் பாதிக் கப்பட் பகுதிகளில் கட்டிடங்களின் சேதம் குறித்து மதிப்பீடு செய்வ தற்காக நிபுணர்கள் குழுவை அரசு நியமனம் செய்துள்ளது. 10 அதிகாரிகள் அடங்கிய அந்த குழுவில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் புவி யியலாளர்கள், உள்ளாட்சி சிவில் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் நில வருவாய்த்ததுறை பிரதிநிதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டிட சேத விவரங்களை மதிப்பீடு செய்ய உள்ளனர். அவர்கள் பகுதியளவு மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவார்கள். மேலும் கடைகள், வணிக கட்டிடங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்களையும் ஆய்வு செய்வார்கள்.

    ஒரு வாரத்திற்குள் சேத மதிப்பீடு தொடர்பான அறிக்கையை சர்ப்பிக்குமாறு நிபுணர் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வயநாட்டில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 405-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மறுதினம் (சனிக்கிழமை) வயநாடு செல்கிறார். டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்படும் அவர், கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாட்டுக்கு சென்று ஹெலிகாப்டரில் பறந்தபடியே நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.

    பின்னர் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைத்தவர்கள் சிலருடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    பிரதமரின் இந்த பயணத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் கண்ணூரில் இருந்து இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    பிரதமரின் பயணம் குறித்த தகவல்கள் கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.
    • ராணுவ மீட்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்கியயுள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனைச் சந்தித்து வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் வேந்தர் ஜி.விசுவநாதன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

    அப்போது வி.ஐ.டி. துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பாலம் முழுமையான சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மீட்பு பணிகள் முடியாத நிலையில் பாலங்கள் சேதமானதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே ராணுவத்தினர் பெய்லி பாலம் அமைத்தனர். இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வந்தன.

    இந்நிலையில் நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளது. பாலம் முழுமையான சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனம் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மீட்பு பணிகள் முடியாத நிலையில் பாலங்கள் சேதமானதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

    • நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன.
    • சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது. நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள்.

    நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. மீட்பு பணிகளை வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன், வனத்துறை மந்திரி சுசீந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் மந்திரி கே.ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், 'நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களை தேடும் பணி கைவிடப்படவில்லை. காணாமல் போன கடைசி நபரை கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகள் தொடரும்' என தெரிவித்தார்.

    நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன. அத்துடன் அதிகம் பேர் அங்கு கூடுவதால், மீட்பு பணியில் சிரமம் ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, நேற்று ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 1,500 பேர் மட்டுமே பெய்லி பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    நவீன கருவியான ரேடார் சிக்னல் அடிப்படையில் மண்ணில் புதைந்தவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உள்ளார்களா என தேடப்பட்டது. உடல்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நவீன கருவிகளுடன் தேடும் பணி நடந்தது. பாறைகள், மரங்களுக்கு அடியில் உடல்கள் புதையுண்டு உள்ளதா என தேடும் பணி நடைபெற்றது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 402 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. சாலியாற்றில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    மேலும், நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2019-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட புதுமலை பகுதியில் 64 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம் வரிசையாக குழிகள் தோண்டப்பட்டன. பின்னர் சர்வமத பிரார்த்தனையுடன் ஒரே இடத்தில் 39 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

    நிலச்சரிவு காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    • மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள்.
    • மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக முடிக்க வேண்டும்.

    வேலூர்:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு துயரசம்பவம் இதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து அழ வைத்த ஒரு நிகழ்வு. அதைக்கூட மத்தியஅரசு பேரிடராக அறிவிக்க மாட்டோம் என்றால் அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா? அல்லது கல்லா? என்று தெரியவில்லை.

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள். அதனால் தான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் இல்லை. பூகோளம் பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி தவறாக பேசுவார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது.

    மேகதாது அணை பிரச்சனையில் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி விட்டார்கள் என்று பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை விவரம் தெரியாமல் குற்றம் சாட்டி உள்ளார். அவர் விவரம் தெரிந்தவர் என்று நான் இதுவரை நினைத்திருந்தேன். தற்போதுதான் அண்ணாமலை விவரம் இல்லாதவர் என்று தெரிகிறது. வயநாடு நிலச்சரிவு பேரிடரை பிரதமர் மோடி பார்வையிடாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    • நிலச்சரிவில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை இழந்துவிட்டனர்.
    • சிலர் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் தேடி அலைகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் தப்பியிருக்கின்றனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு நிவராரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களில் ஒருசிலரை தவிர பெரும் பாலானவர்கள், நிலச்சரிவில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை இழந்துவிட்டனர்.

    அவர்கள் கண்ணீர் வடித்தபடி நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர். பலர் மண்டோடு புதைந்தது, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது உள்ளிட்டவைகளை நேராக பார்த்த அவர்கள், அந்த காட்சிகளை மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பலரது குடும்பத்தினர் இன்னும் கிடைக்கால் இருக்கின்றனர்.

    இதனால் அவர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடிக்க உடல்கள் வைக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று தங்களின் உறவுகளை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிலர் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் தேடி அலைகிறார்கள்.

    அப்படி தேடியதில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை ஒரு வாரத்திற்கு பிறகு பார்த்து உள்ளார். நாய் மற்றும் பெண்ணுக்கு இடையே நடந்தை பார்த்த அனைவரையும் கலங்க செய்தது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    வயநாடு சூரல்மலை பகுதியை சேர்ந்தவர் உமா பாலகிருஷ்ணன். வயநாடு நிலச்சரிவில் இவர் தனது குடும்பத்தினருடன் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்டு விட்டதை அறிந்த அவர்கள், தங்களின் வீட்டில் இருந்து வெளியேறி ஓடினர். இருள்சூழ்ந்த அதிகாலை நேரத்தில் தட்டுத்தடுமாறி சென்றனர்.

    அப்போது அவர்களுடன் அவர்கள் வளர்த்த செல்ல நாயும் ஓடி வந்தது. ஆனால் சிறிது தூரத்திற்கு பிறகு அவர்களது நாயை காணவில்லை. உயிர் பிழைப்பதற்காக ஓடியபடி இருந்த உமா மற்றும் அவரது குடும்பத்தினர் நிவாரண முகாமுக்கு சென்று தங்கினர்.

    தனது குடும்பத்தினர் அனைவரும் தப்பிவிட்ட நிலையில், தாங்கள் செல்லமாக வளர்த்தநாய் என்ன ஆனது? என்று தெரியாமல் உமா தவித்த படி இருந்தார். அதனை கண்டுபிடிப்பதற்காக சூரல்மலை பகுதிக்கு நேற்று சென்றார். எங்காவது தனது நாய் இருக்கிறதா? என்று பார்த்தார்.

    அப்போது ஒரு இடத்தில் அவரது வளர்ப்பு நாயை கண்டுபிடித்தார். உமாவை பார்த்த அந்த நாய் வேகமாக ஓடிவந்தது. உமாவின் காலை சுற்றிசுற்றி வந்து செல்லமாக குறைத்தது. நாயை பார்த்த உமா அதனை அரவணைத்தார். நாயின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு கொஞ்சினார். அவர்களது பாசப்போாட்டத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

    சிறிதுநேரம் செல்ல நாயை கொஞ்சியபடி இருந்த உமா, நிவாரண முகாமுக்கு செல்ல புறப்பட்டார். அவரை சுற்றியபடியே நாய் இருந்தது. அதனை பிரிந்துசெல்ல மனமில்லாமல் உமா அங்கிருந்து விடைபெற்றார். அவர் சென்ற வாகனத்தை அவரது செல்ல நாய் சில கிலோமீட்டர் தூரம் வரை பின்தொடரந்து ஓடியது.

    பார்த்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்த இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    ×