என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Safety"

    • பெண்கள் காரை இயக்க அமர்ந்தவுடன் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
    • இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் பெண்கள் இதை கவனிக்க வேண்டும்.

    பெண்கள் காரை இயக்க அமர்ந்தவுடன் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தங்களுக்கு ஏற்றவாறு இருக்கையை சரி செய்து கொள்ள வேண்டும். வாகனத்தின் பின்பகுதி, பக்கவாட்டுப் பகுதியை கார் ஓட்டும் போது கவனிக்க உதவும் கண்ணாடி (ரியர் வியூ மிரர்), பக்க வாட்டு கண்ணாடி (சைடு வியூ மிரர்) ஆகியவற்றை தங்களுக்கு வசதியாக சரி செய்து கொள்ளவேண்டும். காரை இயக்குவதற்கு முன்பாக போதுமான அளவுக்கு எரிபொருள் (பெட்ரோல் அல்லது டீசல்) இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

    நெரிசல் மிகுந்த சாலைகளில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தங்கள் வாகனத்திற்கும் இடையே சுமார் 10 மீட்டர் இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

    பெண்கள் பெரும்பாலும் கார் ஓட்டும்போது குளிர் சாதனத்தை உபயோகிப்பார்கள். அப்படி உபயோகிக்கும்போது கேபினில் தேவையான அளவுக்கு குளிர் வந்தவுடன் ஏ.சி.யை ஆப் செய்துவிட்டு பிறகு குளிர் குறைந்தவுடன் ஆன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எரிபொருள் சிக்கனமாகும். சிலர் கார் ஓட்டும்போது வாகனத்தின் டேஷ் போர்டில் உள்ள கிளஸ்டரை கவனிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு. கிளஸ்டரில் உள்ள ஸ்பீடா மீட்டர், டெம்ப்ரேச்சர் கேஜ், பியூயல் கேஜ் ஆகிய மூன்றையும் அடிக்கடி கவனித்து வாகனத்தை ஓட்டுவது நல்லது. இதனால் சில விபத்துகளை தடுக்க முடியும். நான்கு முனை சிக்னலைக் கடக்கும்போது நாம் போக விரும்பும் திசையின் எதிர் திசையில் ஹஸார்ட் சுவிட்சை ஆன் செய்துவிட்டு சிக்னலைக் கடக்க வேண்டும்.

    மாலை நேரங்களில் வாகனம் ஓட்டும் பெண்கள், முகப்பு விளக்கு, வைபர் ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்று சரிபார்த்துக் கொள்வது பாதுகாப்பானது. ஏனென்றால் எலக்ட்ரிக்கல் பழுது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆகவே இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் பெண்கள் இதை கவனிக்க வேண்டும். தாங்கள் இயக்கும் காரை சரிவர பராமரிக்க வேண்டும். போதுமான அளவு தூரம் ஓடிய உடன் சர்வீஸ் சென்டரில் கொடுக்க வேண்டும். ஆயில் மாற்றுவது, கூலன்ட் போன்றவை உரிய காலத்தில் மாற்ற வேண்டும். உரிய காலத்தில் சர்வீஸ் செய்வது வாகனத்தின் செயல்பாடுகள் நீடித்திருக்க உதவும்.

    • பெண்களுக்கான ஆலோசனை வழங்க இந்த மையம் செயல்படுகிறது.
    • குழந்தை திருமணத்தை தவிர்ப்போம். பெண் குழந்தைகளை ஆரோக்கியத்திலும், ஆற்றலிலும் வளர்ப்போம்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது.பெண்களுக்கான ஆலோசனை வழங்க இந்த மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் சுவர்களில் கடந்த வாரம் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டது. ஓவியங்கள், வாசகங்கள் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-  கனவு, கல்வி, நலம் இதை விரும்புவதே குழந்தையின் மனம். குழந்தை திருமணத்தை தவிர்ப்போம். பெண் குழந்தைகளை ஆரோக்கியத்திலும், ஆற்றலிலும் வளர்ப்போம். பெண் குழந்தை திருமணத்தை தடுக்க, உடனே புகார் அளிக்கலாம். மாவட்ட சமூக நல அலுவலர், போலீசார் உதவியை நாடலாம்.

    பெண்களுக்கான உதவி எண் 1098. எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். பணியிடத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க 2013ல் சட்டம் இயற்றப்பட்டது. உதவிக்கு ஒன் ஸ்டாப் சென்டரை 044 22233355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.எந்த ஒரு நிறுவனத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைத்திருத்தல் வேண்டும். குழுவின் தலைவராக கலெக்டர் தொடர்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம் போல செயல்படுகிறது.
    • இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.

    பேஷன் சம்பந்தமான தகவல்களும், ஆலோசனைகளும் இப்போது அப்ளிகேஷன்களிலேயே கிடைக்கிறது. உங்களுக்கு எந்த மாதிரியான உடைகள் சிறப்பாக இருக்கும்?, எந்த நிறத்திலான உடை பொருந்தும், இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் என்பது போன்ற, பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்கி கொண்டிருக்கின்றன. அப்படி இளைஞர்/இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.

    வார்டுரோப் அசிஸ்டெண்ட்

    திறமையான பேஷன் டிசைனரை, நம்முடன் வைத்திருக்கும் உணர்வை இந்த செயலி அளிக்கிறது. ஏனெனில், இது உங்கள் ஆடைகளை வகைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலநிலைக்கு ஏற்ற உடை எது என்று தினமும் தெரிவிக்கும். மேலும் உலகளவிலான டிரெண்டிங் ஆடைகள் மற்றும் டிசைனர்களின் அப்டேட்களையும் அறியலாம். இதில் ஆடைகளை நல்ல விலைக்கு விற்கும் வசதியும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிரு முறை பயன்படுத்திய அல்லது வாங்கியபின் அளவு, நிறம் போன்றவை பொருந்தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த 'ஆப்'பின் வாடிக்கையாளர்களிடையே விற்கலாம். நீங்களும் அதுபோல் மற்றவர்களிடம் இருந்து வாங்கலாம்

    பேஷன் குளோசட்

    இந்த செயலியை 'ஆன்' செய்து, தனித்தனியாக தலைப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம். பேஸ்புக், டிவிட்டர், இ-மெயில் என தோழிகளுடன் பகிர்ந்து கருத்து கேட்கும் வசதியும் உள்ளது.

    ஷிசிமோ

    நாளைக்கு கல்லூரியில்/ அலுவலகத்தில் முக்கியமான நிகழ்ச்சி. டிரெண்டியான உடையை எப்படி கண்டுபிடிப்பது? எங்கு வாங்குவது என குழப்பமா? விடுங்கள் கவலையை! கல்லூரி பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்குப் பல்வேறு பேஷன் ஐடியாக்களைப் பெற்றுத் தரும். நீங்களும் உங்கள் ஆடைப் பரிந்துரைகள் மற்றும் ஆல்பங்களை மற்ற பெண்களுடன் பகிர்ந்து, கருத்து பெறலாம்!

    ஸ்மார்ட் குளோசட்

    ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டுமல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த `ஆப்'பில் உள்ள பிரத்யேகக் காலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்; நண்பர்களுக்கும் பகிரலாம்.

    பாலிவோர்

    இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம் போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, சந்தையில் உள்ள டிரெண்டிங் ஆடைகளைப் பார்க்கலாம், வாங்கலாம், மற்றும் பிறரின் கருத்துகளையும் பெறலாம். மேலும், இதில் உள்ள ஆயிரக்கணக்கான பிராண்டட் மற்றும் டிசைனர் ஆடைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து, பிறகு வாங்குவதற்கென அந்தப் புகைப்படங்களை சேமித்தும் வைக்கலாம்.

    • எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள்.
    • இன்முகத்துடன் பேசுங்கள்.

    தொழில்துறையில் வெற்றி பெற சில வழிமுறைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.

    உழைக்க தயாராகுங்கள்

    வேலை கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். உழைப்பை எறும்பிடம் கற்றுக்கொள்ளலாம். அது தன் எடையை விட மிக அதிக எடையை தூக்கி கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுவதே உழைப்புக்கு உதாரணம். நாளைய தேவைக்கு இன்றே அது களத்தில் இறங்கி விட்டது. நீ மட்டும் உழைக்க தயங்குவது ஏன்? சோம்பலை உதறி தள்ளு. எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள். அந்த உழைப்பு நிச்சயம் உங்களை சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டும்.

    இன்முகத்துடன் பேசுங்கள்

    தொழிலை நடத்துபவர்கள் தன்னிடம் பணிபுரியும் வேலைக்காரர்களிடமும், நுகர்வோர்களிடமும் இன்முகத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் கடினமான வேலை என்றாலும் அதை துச்சமாக மதித்து வேலைக்காரர்கள் கூடுதல் நேரமும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். சிடுமூஞ்சியுடன் பேசினால் எதிர்பார்த்த வேலை நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது.

    நுகர்வோரும் நம்முடைய இன்முக பேச்சில் மகிழ்ந்து கூடுதல் பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு உண்டு. இன்முகத்துடன் பேசுங்கள். அது உங்கள் மதிப்பை தானாக மற்றவர்களிடம் இருந்து உயர்த்தி காட்டும்.

    நேரம் தவறாமை

    தொழில் செய்பவர்கள் நேரம் தவறாமல் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய விரும்பும் பொருட்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்தால் தான் மீண்டும் ஆர்டர் கிடைக்கும். அது போல் நேரம் தவறாமல் பணிக்கு செல்ல கற்று கொள்ள வேண்டும். சூரியன் ஒருநாள் நேரம் தவறி உதித்தால் நிலைமை என்னவாகும். சிந்தித்து செயல்படுங்கள். நேரத்துடன் உழையுங்கள்.

    முயற்சியை கைவிடாதீர்கள்

    முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கேற்ப முயற்சி செய்தால் தான் எந்த துறையிலும் சாதிக்க முடியும். ஆதலால் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். தோல்வி கிடைக்கிறதே என்று செய்ய முயன்ற தொழிலில் பின்வாங்கினால் நிச்சயம் சாதிக்க முடியாது.

    அந்த தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். பின்னர் தோல்வி தவிர்ப்பது எப்படி என்று உழையுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். கரையை தொடமுடியவில்லை என்று எப்போதும் அலைகள் தன் முயற்சியை கைவிடுவதில்லை. என்றாவது ஒருநாள் சுனாமி, பேரலைகளுடன் அது கரையை எட்டும்.

    திட்டமிடுதல் அவசியம்

    ஒருவர் தொழில்முனைவராக வர வேண்டும் என்றால் அதற்கு திட்டமிடுதல் அவசியமாகும். நாம் மேற்கொள்ள இருக்கும் தொழிலில் வெற்றி பெற முடியுமா? அந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் பெறலாமா? என்று ஆராய்ந்து திட்டமிட்டு தொழிலை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிடாமல் செய்த காரியம் தோல்வியில் தான் முடியும். எனவே நீங்கள் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது நமக்கு சரிப்பட்டு வருமா என்று ஆராய்ந்து, அந்த தொழிலை மேற்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த தொழிலில் வெற்றியை பெற முடியும்.

    விளம்பர யுக்தி

    இன்றைய போட்டி உலகில் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் உங்கள் நிறுவனத்தை அவசியம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரக்கூடிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். விளம்பரம் இல்லையெனில் உங்கள் பொருட்களின் தன்மை பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    பெரிய, பெரிய நிறுவனங்கள் மக்களிடம் மிகவும் பரிட்சம் ஆன பிறகும் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி வருவதே அது தங்கள் நிறுவனம் மக்கள் மனதை விட்டு அகன்று விடக்கூடாது என்பதற்காக தான். ஆதலால் நீங்கள் எந்த தொழிலை ஆரம்பித்தாலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எளிதில் மக்கள் மனதில் புரியும்படி விளம்பரம் செய்யுங்கள். அதன் மூலம் உற்பத்தி பொருட்கள் அதிகரித்து அதிக லாபம் கொட்டும்.

    இதுபோல் இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.

    • உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
    • பாஸ்வேர்டுகளை 41 சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள்.

    இணையதளம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனடியாக தருவது ஒரு முகம்.

    ஆபாசம், ஹேக்கிங் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 48 சதவீதம் பேர் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக ரூ.15 ஆயிரத்்துக்கும் அதிகமான தொகையை இணையதள திருடர்களிடம் இழக்கிறார்கள், என்று ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ.23,878-ஆக உள்ளது. அப்பாடா நம்மைவிட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையதளத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்போது, பாஸ்வேர்டு உள்பட கணக்கு விவரங்களை திருடுவது, பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

    40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.

    உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையதளம், தற்போது பாதை மாறி அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக, பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையதள குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இணையதள பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுவதும் நடக்கிறது.. இந்த தகவல்கள் யாரோ ஒரு கும்பலால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனால் பணத்தை இழக்க நேருகிறது. எனவே நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். எனவே சுயவிவரங்களை பகிரும்போது அதிக கவனம் தேவை.

    • குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது.

    பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் காணப்பட்டாலும் பெண்களுக்கான உரிமைகளும், தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்களை கடவுளாக கருதும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அதிகரித்து வருவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. பெருகி வரும் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நாட்டின் சமநிலையை சீர்குலைக்கிறது என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளும் இந்த நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கதே. இவ்வாறு பல சமூக சிக்கல்களுக்கு இடையேயும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    நாட்டின் நிலை வளர்ச்சி அடைய பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி போன்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். குறிப்பாக குழந்தை திருமணம் போன்ற நிகழ்வுகள் முற்றிலும் இல்லாமல் போக வேண்டும். இதற்காக அரசும் சட்டம் இயற்றி உள்ளது. அறியாத குழந்தை பருவத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு துணை புரியும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்கு உரியவர்களே என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

    18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்களை போக்சோ சட்டத்தின் படி சிறையில் அடைக்கவும், 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தினால், அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை பெண் குழந்தைகளுக்காக நிறைவேற்றினாலும், குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்.

    மாற்றங்கள் குடும்பங்களில் இருந்து வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தன் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு அநீதி நடந்து வருகிறது. இந்த நிலை மாறி, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, சம உரிமை, கல்வி என அனைத்தும் கிடைக்கப் பெறும் போது சமூகத்தில் பெண்களின் நிலை உயரும்.

    இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 2008-ம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜனவரி 24-ந் தேதியை (இன்று) தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • பெண்களை அதிக பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிப்பதில்லை.
    • அதிக நேரம் செய்ய வேண்டிய வேலையை ஆலைகள் பெண்களுக்கு அளிக்கின்றனவாம்.

    ஆண்களையும் பெண்களையும் பணியில் சமமாக நடத்த வேண்டியதன் அவசியம் பற்றி பிரபல பன்னாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து பட்டியலிட்டது.

    95 நாடுகளில் ஆய்வு செய்ததில் 40 நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதாவது, 1. வேலையில் சமத்துவம், 2. பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புள்ள துறைகள் அல்லது அத்தியாவசிய துறைகள், 3. சட்டப்பூர்வமான பணி பாதுகாப்புள்ள துறைகள் அல்லது அரசியல் ரீதியாக பாதுகாப்பு தேடக்கூடிய துறைகள், 4. உடல் ரீதியாக தீங்கு விளைவிக்காத வேலைகள் அல்லது சுயமாக செயல்பட வாய்ப்புள்ள வேலைகள் என்று 4 பிரிவுகளாக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    நல்ல நிறுவனங்கள், அதிக ஊதியம் தரும் நிறுவனங்கள் அனைத்தும், அதிக எண்ணிக்கையில் பெண்களை பணிக்கு தேர்வு செய்வதில்லை.. அப்படியே பணி வழங்கினாலும் பெண்களை அதிக பொறுப்புள்ள பதவிகளுக்கு நியமிப்பதில்லை.

    அதிக நேரம் செய்ய வேண்டிய வேலை, சலிப்பு ஏற்படுத்தும் வேலை, உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வேலை, இழிவு என்று கருதத்தக்க வேலை, முக்கியத்துவம் அற்ற வேலை போன்றவற்றையே பல நிறுவனங்கள், ஆலைகள் பெண்களுக்கு அளிக்கின்றனவாம்.

    வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ உதவி, கைக்குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் வசதி, போக்குவரத்து வசதி, காப்பீட்டு வசதி போன்றவையும் சரியாக செய்து தரப்படுவதில்லையாம்.

    ஒரு நாட்டில் ஆண்களைவிட பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை அறிய பின்வரும் அம்சங்கள் உதவுகின்றன.

    1. பெண் சிசுக்களை கருவில் அழிப்பது, 2. பெண் குழந்தைகளின் இறப்பு, 3. பிறப்பு முதல் 6 வயது வரையிலான குழந்தைகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பெண் குழந்தைகளின் விகிதம், 4. ஆண்-பெண் இடையேயான விகிதாசாரம், 5. பெண்களின் எழுத்தறிவு, 6. மகப்பேறின்போது தாயின் மரண விகிதம். இதில் பெண்களுக்கு பாதகமான அம்சங்கள் அனைத்தும் இல்லாமல் இருந்தால், அந்த நாடு பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என எண்ணிக்கொள்ளலாம்.

    உலகம் முழுவதும் 2011-ம் ஆண்டைய கணக்கெடுப்புப்படி ஆண்களின் எழுத்தறிவு 82.14 சதவீதம் ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 65.46 சதவீதம் ஆகவும் இருக்கிறது. இந்த கற்றல் இடைவெளியை எவ்வளவு வேகமாக குறைக்கிறோமோ, அதை பொறுத்துதான் பெண்களுக்கான சமத்துவம் சமூக அளவில் உறுதிப்படுத்தப்படும் எனவும் அந்த ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

    • பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.
    • குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம்.

    இயல்பான குடும்ப பெண்களை, பங்கு சந்தை முதலீட்டாளர்களாக மாற்றி வருகிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன். சென்னையை சேர்ந்தவரான இவர், பங்குசந்தையில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர். தனக்கு நன்கு பழக்கமான பங்கு சந்தையை, குடும்ப பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டவர், அதை திறம்பட செய்து வருகிறார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், ஆன்லைன்-ஆப்லைன் பயிலரங்கம் மூலமாகவும் பெண்களுக்கு பங்குசந்தை கலையை கற்றுக் கொடுப்பவரிடம் பேசினோம். இந்த பயணம் எப்படி தொடங்கியது என்பது முதல், பங்கு சந்தையில் களமிறங்க ஆசைப்படும் பெண்களுக்கு வழிகாட்டுதல் வரை எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை இதோ...

    * எப்படி தொடங்கியது இந்தப் பயணம்?

    எனக்கு பங்கு சந்தை, பங்கு வர்த்தகம் சார்ந்த அனுபவமும், படிப்பினையும் இருந்ததால், அதை மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். சிறு முயற்சியாகத்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பங்கு சந்தை முதலீட்டாளர்களாக, அந்த துறை சார்ந்த பணியாளர்களாக மாற்றி இருக்கிறேன்.

    * பங்கு சந்தை குடும்ப பெண்களுக்கு ஏற்றதா?

    மற்றவர்களைவிடவும், குடும்ப பெண்களுக்குத்தான் சிறப்பானது. காலை 9 மணிக்கு தொடங்கும் பங்கு சந்தை வர்த்தகம், மாலை 3.30 மணி வரை நடைபெறும். இந்த நேரம், ஒருசில குடும்ப தலைவிகளுக்கு பிசியான நேரமாக இருந்தாலும், ஒருசிலருக்கு ஓய்வு நேரமாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில், தையல் வேலை, ஆரி வேலைப்பாடுகள், யூ-டியூப் பொழுதுபோக்குகள் என நேரம் செலவாகும். இப்படி பொழுதுபோக்காக கழிக்கும் நேரத்தை, குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம். கூடவே, குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்ற தங்களால் முடிந்த பங்களிப்பை பங்கு சந்தை வாயிலாக பெறலாம்.

    * குடும்ப பெண்கள், பங்கு சந்தையில் இணைவது எப்படி?

    ரொம்ப சுலபம். குடும்ப பெண்கள் மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொதுவானதுதான். டிமெட் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். பிரபல வங்கிகளே இந்தவகை கணக்குகளை வழங்குகின்றன. 15 நிமிடங்களில் டிமெட் கணக்கை தொடங்கிவிட முடியும். அதேபோல பங்குகளை வாங்கி, விற்க, நிர்வகிக்க நிறைய 'புரோக்கிங்' இணையதளங்களும் இயங்குகின்றன. அதில் ஒன்றில், உங்களுக்கு விருப்பமான துறையில், விருப்பமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலமாக, பங்கு சந்தையில் நீங்கள் இணைந்துவிடுவீர்கள்.

    * சிக்கலான பங்குசந்தையை குடும்ப பெண்கள் சுலபமாக கற்றுக்கொள்ள முடியுமா?

    முடியும். பங்கு சந்தையின் செயல்பாடுகள் எளிமையானதுதான். அதன் அடிப்படையை புரிந்து கொண்டால், எளிமையாக வர்த்தகம் செய்யலாம். டி.வி. சேனல்கள், யூ-டியூப் சேனல்கள், பேஸ்புக் ரீல்ஸ், ஆன்லைன் படிப்புகள், வாட்ஸ் ஆப் குரூப்கள், கருத்தரங்குகள்... இப்படி நிறைய தளங்களில், பங்கு சந்தை பற்றிய விளக்கங்கள் கிடைக்கின்றன. நிறைய தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் அதுபற்றிய படிப்பினையை வழங்குகின்றன. என்.ஐ.எஸ்.எம். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டி மார்க்கெட்) கல்வி நிறுவனத்தில், ஷேர் மார்க்கெட் பற்றிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

    * பயிற்சி வகுப்புகள் அவசியமா?

    உங்களது சேமிப்பை முதலீடு செய்ய இருக்கிறீர்கள். அதனால் நிச்சயம் பயிற்சி வகுப்புகளும், வல்லுநர்களின் வழிகாட்டுதலும் அவசியம். இல்லையேல், உங்களது சேமிப்பு கரைந்துவிடும்.

    * பங்கு சந்தையில் இளம் பெண்களின் பங்களிப்பு இருக்கிறதா?

    நிறைய இளம் பெண்கள் பங்கு சந்தையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் இளம் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பங்கு சந்தை மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இருப்பினும் வெளிப்படையாக தெரிவதில்லை. யூ-டியூப்பை திறந்து பார்த்தால், அதில் நிறைய தமிழ் பேசும் பெண்கள் பங்கு சந்தை பற்றிய தகவல்களை விளக்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

    * பங்கு சந்தை, கல்லூரி மாணவிகளுக்கு பயன்படுமா?

    வணிகம் சார்ந்து படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு பங்கு சந்தை சிறப்பான பயிற்சிக்களம். ஒரு பங்கு வாங்கினால், அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் நமக்கு வருடந்தோறும் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம், பிரபல நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் எப்படி தயாரிக்கின்றன, நிதி மேலாண்மையை எப்படி கையாள்கின்றன... போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

    * பங்குகளை வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது... இவையெல்லாம் குடும்ப பெண்களுக்கு சிக்கல் நிறைந்த வேலைகளா?

    இல்லவே இல்லை. பல இணையதளங்கள் இதுபோன்ற வேலைகளை மிக சுலபமாக்கி விட்டன. பெண்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் கணக்கு ஒன்று தொடங்கி, அதில் இருக்கும் 'வாங்க', 'விற்க' ஆகிய பட்டன்களை மட்டும் அழுத்தினாலே போதுமானது. மற்றபடி, சட்டரீதியான வேலைகளை, அந்தந்த இணையதளங்களே பார்த்துக் கொள்ளும்.

    * பங்கு சந்தைக்குள் யாரெல்லாம் நுழையலாம்?

    கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    * பங்கு நிறுவனங்களை எப்படி தேர்வு செய்வது?

    என்.எஸ்.இ. எனப்படும் இணையதளத்தை திறந்து பார்த்தால், 'நிப்டி 50' என தலைசிறந்த 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தந்த நிறுவனங்களின் கடந்த கால லாப-நஷ்ட கணக்குகளை அடிப்படையாக கொண்டே அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தமான துறை நிறுவனங்களை தேர்வு செய்து, முதலீடு செய்யலாம். அதுபோக, உலக நடப்புகள், உலக வர்த்தகம் போன்றவற்றையும் கவனித்து, அதற்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.

    * துறை சார்ந்த அறிவு தேவையா?

    நிச்சயமாக. நடப்பு 'டிரெண்ட்' பற்றி தெரிந்திருக்க வேண்டும். அடுத்ததாக, ஒவ்வொரு காலகட்டத்தில் எந்த மாதிரியான துறைக்கு அதிக வரவேற்பு இருக்கும், அடுத்த 10 ஆண்டுகளில் எந்த துறை அபார வளர்ச்சி பெறும், எது வீழ்ச்சி பெறும் என்பது போன்ற பொது சிந்தனைகளும், உங்களது பங்கு மதிப்பினை உயர்த்தி தரும்.

    * புதிதாக பங்கு சந்தைக்குள் நுழையும் பெண்கள் செய்யக்கூடாத ஒன்று எது?

    அவசரப்படக்கூடாது. ஒரு பங்கு வாங்குகிறோம் என்றால், அது சேமிப்பு என நினைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாள் கழித்து, அதன் மதிப்பு கூடியிருக்கும் வேளையில், அதை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும். இன்று முதலீடு செய்து, நாளை பல லட்சம் லாபம் பார்க்க வேண்டும் என்றால், அதே அளவிற்கு நஷ்டத்தை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

    * பங்கு சந்தை முதலீடு அபாயம் தரக்கூடியதா?

    ஆம்..! கவனமாக செயல்படாத வரை அது, அபாயம் தரக்கூடியதுதான். ஆனால் தகுந்த படிப்பினையோடு கையாளும்போது, அது சிறப்பான முதலீட்டு தளமாக மாறிவிடும்.

    * பங்கு சந்தையில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் அரசு அமைப்புகள் உண்டா?

    இருக்கிறது. செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா எனப்படும் 'செபி' பங்கு நிறுவனங்களுக்கும், பங்குகளை வாங்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அது இவ்விரு பிரிவினருக்கும் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    • அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது.
    • எல்லோரும் தமது வேலையை முடித்தபின் ‘மீட்டிங்’கை நடத்துங்கள்.

    விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அதிலும் அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது. அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி?

    இதோ 5 டிப்ஸ்கள்:

    * நன்றாகப் பணிபுரியக்கூடியவர்கள் என்று உங்களுக்கு தோன்றக்கூடியவர்களை உங்கள் குழுவில் சேர்ப்பது நல்லது. சாதாரணமாக பிறருடன் நீங்கள் கலந்து பழகி மற்றவர்களை அறிந்திராதவர் என்றால், யார் உங்கள் குழுவில் சேர்வதற்கு ஆர்வமும், விருப்பமுமாக இருக்கிறார்கள் என்று பார்த்துச் சேர்க்கலாம். சும்மா உட்கார்ந்தபடி அதுவாகவே குழு உருவாகட்டும் என்று இருக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்.

    * உங்கள் குழுவுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டபின், அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். குழு அமைக்கப்பட்ட உடனே அவசர அவசரமாக அடுத்தடுத்து 'மீட்டிங்' போடாதீர்கள். குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த வேகத்துக்கு ஏற்ப, தங்களால் ஒதுக்க முடிந்த நேரத்துக்கு ஏற்ப வேலை செய்யட்டும். வாய்மொழிப் பரிமாற்றங்கள் போதும். எல்லோரும் தமது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.

    * வேலையை முடித்த அறிக்கையை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் போக வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். பிற குழுக்கள் எப்படி வேலை அறிக்கை அளிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலை அறிக்கையை வித்தியாசமாக அளிக்கலாம்.

    * குழுவில் பிரச்சினைகள் வரலாம். சிலரிடம் 'ஈகோ' தலைதூக்கலாம். சிலர் சோம்பேறித்தனமாக இருக்கலாம். எனவே உங்கள் குழுவில் வேலையில் பலவீனமாக இருப்பவரைக் கண்டு பிடித்து, அவருக்கு ஏற்ப எளிதான வேலையைக் கொடுங்கள். உங்கள் குழுவில் ஒழுங்கீனமாக ஒருவர் இருந்தால், அவரது வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கப் பாருங்கள். வேலை அறிக்கை அளிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே அதைத் தயார் செய்துவிடுங்கள்.

    * குழு உறுப்பினர்கள் பலர் சரியாக வேலை செய்யாமல், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தலையில் எல்லா வேலையும் விழும்போது அவர் மனம் கசந்து வெறுத்துப் போவார். உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டால், குறிப்பிட்ட 'பிராஜெக்ட்' முழுவதையும் கவனிக்கும் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

    உங்கள் குழு உறுப்பினர்கள் சரியில்லாவிட்டால், அது நீங்கள் கையில் எடுத்திருக்கும் பொறுப்பை ஏன் பாதிக்க வேண்டும்? அதில், எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், இறுதி முடிவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். யாருமே வேலை செய்யாதபோது நீங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் குழுவில் ஒன்றுமே செய்யப்படாமல் இருப்பதை விட, ஏதோ உங்களால் அதிகபட்சமாக செய்யக்கூடியதை செய்வது சிறப்பானது. வேலையின் முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்குக் கீழே கொண்டுவந்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.

    • திட்டமிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
    • பங்குச்சந்தையில் ஜெயிப்பது எப்படி? என்பதை இங்கே காண்போம்.

    பங்குச்சந்தையில் ஜெயிப்பது எளிதான காரியம் அல்ல. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்பவே நமது லாப-நஷ்டம் அமையும். எனவே, கண்ணை மூடிக்கொண்டு சந்தைக்குள் குதிக்காமல், ஓரளவுக்கு விவரங்களை தெரிந்து கொண்டு முதலீட்டைத் தொடங்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு பங்குச்சந்தையில் ஜெயிப்பது எப்படி? என்பதை இங்கே காண்போம்.

    பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு முதலில் பதில் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற துறைகளில் கிடைக்கும் வருமானத்தைவிட பங்குச்சந்தை மூலம் கிடைக்கும் லாபம் அதிகம். அதற்கு நீங்கள் கொஞ்சமாவது உழைக்க வேண்டும். முதலில் உங்களை நீங்கள் ஒரு வியாபாரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பங்குச்சந்தைக்கு நீங்கள் வருவதே வியாபாரம் செய்யத்தான். அந்த வியாபாரத்தை சரியாக செய்தீர்கள் எனில் லாபம் உங்களைத்தேடி வரும். தவறாக செய்தால் கையில் உள்ள பணம்தான் கரையும். கவனம் தேவை.

    வியாபாரம் செய்ய முதலீடு வேண்டும். இயல்பான வாழ்க்கை வியாபாரத்தில் கடன் வாங்கலாம். லாபம் சம்பாதித்த பிறகு திரும்பத்தந்து விடலாம். ஆனால், பங்குச்சந்தையில் கடன் வாங்கி முதலீடு செய்து விடாதீர்கள். ஏனெனில் இங்கு ரிஸ்க் அதிகம். அதனால்தான் இந்த மூதலீட்டை 'ரிஸ்க் கேப்பிட்டல்' என்கிறோம். எனவே, இந்த ரிஸ்க்கை எடுக்கும் துணிச்சல்காரர்களுக்குத்தான் பங்குச்சந்தையில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தையில் வெற்றிபெற எளிய வழி, ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைகளுக்கு யார், யார்? வாடிக்கையாளர்கள்.

    அவர்களின் ஆதரவு எதுநாள் வரை கிடைக்கும். நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார், அவர்களின் திறமை எப்படி? அந்த நிறுவனம் சார்ந்த துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு முதலீடு செய்வதுதான். உங்கள் முதலீட்டை திட்டமிட்டு, திட்டமிட்டபடி முதலீடு செய்யுங்கள். முதலீடு எவ்வளவு? அதை எப்படியெல்லாம் பிரித்து முதலீடு செய்யலாம் என்பதை உறுதி செய்து கொண்டு பங்குச்சந்தையில் கால் பதியுங்கள். வாங்கும் பங்குகளை எவ்வளவு லாபம் வந்தால் விற்கலாம் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். திட்டமிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

    பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பது உங்களுக்கு தெரியும். இந்த ரிஸ்க்கை குறைக்க எப்போது ஒரு பங்கினால் நமக்கு நஷ்டம் வருகிறதோ, அப்போதே அதை கைகழுவிவிட வேண்டும். விலை குறையும் பங்கு கீழ்நோக்கி வரும் கத்திமாதிரி. அதை பிடிக்க நினைத்தால் நம் கை ரத்தக்களறி ஆகிவிடும். அதேபோல் நாம் வாங்கிய பங்கின் விலை லாபத்தில் இருக்கிறது என்றால் நேரம் பார்த்து அந்த பங்கை விற்று விடவேண்டும். உச்சத்தில் இருக்கும் பங்கு விலை மீண்டும் குறையும். குறிப்பிட்ட அளவு குறைந்தபிறகு மீண்டும் உயரும். இதுவே பங்குச்சந்தையின் நீண்டகால விளை யாட்டு. இந்த விளையாட்டை பற்றி நாம் தெரிந்து கொண்டு, அதுபற்றிய அறிவுடை யவர்களின் நட்பை பெற்று முதலீடு செய்தால் லாபத்தை ஈட்டலாம்; நஷ்டத்தையும் தவிர்க்கலாம். எனவே, இந்த வழிகளை மனதில் வைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் ஜெயிப்பது உறுதி.

    • எம்பிராய்டரி தொழிலை கற்பது எளிது.
    • இந்த தொழிலும் நல்ல லாபம் பார்க்கலாம்.

    பொறுமை நிறைந்த தொழில் என்றால் அது 'எம்பிராய்டரி' தொழில் என்றால் அது மிகையா காது. உடுத்தும் உடைகளில் இருந்து வீட்டை அலங்கரிக்கும் திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள் முதல் செல்போன் கவர்கள் வரை இன்று எம்பிராய்டரியில் வந்து விட்டன. அதிலும் எம்பிராய்டரி வேலையில் பல்வேறு பூக்களை வரைந்து காண்பித்து அழகுபடுத்தினால் அதற்கு வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து விடுகிறது.

    கற்பது எளிது

    எம்பிராய்டரி தொழிலை கற்பது எளிது. தற்போதைய காலக்கட்டத்தில் புத்தகங்கள் மூலமும், டி.வி. நிகழ்ச்சிகள் மூலமும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எம்பிராய்டரியை கற்றுத்தருகிறார்கள். எனவே இதை கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. அதனை எந்த வகையான வேலைபாடுகளில் எம்பிராய்டரி செய்தால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்பதை சர்வே மூலம் அறிந்து கொள்வது நல்லது.

    நீங்கள் வெளியே செல்லும் போது உள்ள கடைகளில் விசாரித்தாலே தெரிந்து கொள்ள முடியும். முக்கியமாக பேன்சி விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கேட்டால் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கேரம் போர்டில் உள்ள 4 ஓட்டைகளிலும் விழும் காய்கள் கீழே விழாமல் இருக்க ஒரு வலை பின்னப்பட்டிருக்கும். அதுவும் எம்பிராய்டரிதான். அதன் தேவையை அறிந்து தயாரித்து கொடுத்தாலும் லாபம் பார்க்கலாம். அதற்கு ஒரு ஊசியும், குரோஷா நூலும் தான் தேவை. இவை மட்டும் உங்கள் மூலதனம் ஆகும்.

    வருமானம் பார்க்கலாம்

    எம்பிராய்டரி மற்றும் குரோஷா வலை பின்னத்தெரிந்தவர்களுக்கு இது மிகவும் சுலபம். ஒரு பண்டல் குரோஷா நூலில் சாதாரண கேரம் போர்டு வலையாக இருநதால் 8 வலைகள் பின்னலாம். இன்னும் கொஞ்சம் உங்கள் மூளையை பயன்படுத்தி சற்று வித்தியாசமாக வலை அமைப்பை மாற்றினால் நீங்கள் பின்னும் வலைக்கு ஏற்ப நூலின் எண்ணிக்கை மாறுபடும். வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, இந்த வலை பின்னும் பணியை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு 5 டஜன் வலைகள் வரை பின்ன வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் சில நிறுவனங்கள் எம்பிராய்டரி பின்னி தருக்கூறி ஆர்டர்களும் கொடுக்கின்றன. அதனை பெற்று எம்பிராய்டரி வேலைபாடுகளை செய்து கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக் கும். தற்போதைய காலக்கட்டத்தில் செல் போன் இல்லாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அதில் குறிப்பாக பெண்கள் செல்போன் வைக்க பயன்படுத்தும் உறைகள் எம்பிராய்டரி வேலைபாடு இருந்தால், அவர்களை கவரலாம். மிக குறைந்த மூலத்தனத்தில் எம்பிராய்டரி வேலைகளை செய்யலாம். பெண்கள் சேலைகள், சுடிதார்கள் உள்பட ஆடைகளிலும் எம்பிராய்டரி வேலைகளை செய்து இந்த தொழிலும் நல்ல லாபம் பார்க்கலாம்.

    • பனி அதிகமாக இருந்த போதிலும் பயிற்சி செய்யும் ஆர்வம் குறையவில்லை.
    • திறந்தவெளியில்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

    காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் குளிர்ச்சி குடிகொண்டிருக்கும். குளிர்காலத்தில் அதன் தாக்கம் அதிகரித்து பனிக்கட்டிகளாக உருமாறும். புல்வெளிகள் மட்டுமின்றி சாலைகள், மரங்கள், வீட்டு கூரைகள் என சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பிரதேசம் போல் பளிச் வெண்மை நிறத்தில் பனித்துளிகள் படர்ந்திருக்கும்.

    தினமும் அதிகாலை உடற்பயிற்சி செய்பவர்கள் கூட குளிர் காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தடுமாறுவதுண்டு. ஆனால் காஷ்மீரில் வசிப்பவர்களிடம் குளிர், அன்றாட வாழ்வின் அங்கமாக இணைந்திருப்பதால் அதனை பொருட்படுத்தாமல் பனி சூழலிலும் சுறுசுறுப்போடு இயங்குவார்கள். இளம் பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

    ஜம்மு காஷ்மீர் அடுத்த பீர்வா நகரத்தில் பனிக்கட்டிகளின் மீது வெறும் காலில் நின்றபடி இளம் பெண்கள் தற்காப்பு கலை பயிற்சிகள் செய்து அசத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

    தரையில் நிற்பது போலவே பனிக்கட்டிகள் மீது சாதாரணமாக நின்று கொண்டு ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டபடி பயிற்சி பெறுகிறார்கள். பனி அதிகமாக இருந்த போதிலும் பயிற்சி செய்யும் ஆர்வம் குறையவில்லை. இதுபற்றி பயிற்சி பெறும் சிறுமிகளில் ஒருவரான முஸ்கான் கூறுகையில், ''நாங்கள் பயிற்சி பெறுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. திறந்தவெளியில்தான் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

    பனிக் காலத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. அதற்காக நாங்கள் சோர்ந்து போவதில்லை. பனியிலும் கூட பயிற்சி செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். உடல் அளவிலும், மனதளவிலும் எங்களை நாங்களே வலுப்படுத்திக் கொள்கிறோம். போட்டியில் பங்கேற்று இந்தியா, காஷ்மீருக்கு பெருமை சேர்க்க விரும்புகிறோம்'' என்கிறார்.

    ''ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதை இலக்காக கொண்டிருப்பதால் பனியைக் காரணம் காட்டி ஒதுங்கி இருக்க விரும்பவில்லை'' என்பது பயிற்சி பெறும் பெண்களின் கருத்தாக இருக்கிறது.

    பனி சீசனாக இருப்பதால் அதனை பிரதானப்படுத்தி பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த குராடல் ஐன் ஜோஹ்ரா, ஐமன் ஜோஹ்ரா ஆகிய இரு சகோதரிகள் கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பனி சிற்பத்தை உருவாக்கி இருந்தனர். டெதாஸ்கோப், தடுப்பூசி, சிரஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு அந்த பனி சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×