என் மலர்
நீங்கள் தேடியது "World War"
- இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
- அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றார் டிரம்ப்.
வாஷிங்டன்:
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.
இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன், அதுவும் குறிப்பாக தற்போதுள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தார்.
- மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்.
- சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள்.
புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் போர், காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் மற்றும் சில நாடுகளில் எழுந்துள்ள எல்லை பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் 3-வது உலக போர் உருவாக வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் பலரும் கணித்துள்ளனர்.
ஏற்கனவே பாபா வாங்கா உள்ளிட்டவர்கள் கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலை தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் இது தொடர்பாக தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2024-ல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன.
மேலும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்.

சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம்.
அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம். அதை தடுக்க ராணுவம் கொண்டு வரப்படலாம். இதனால் இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஜூன் 18-ந்தேதிக்கு பிறகு 3-வது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதற்கு முன்னதாக ஜூன் 10-ந்தேதியோ அல்லது 29-ந்தேதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தனது வலைதள பக்கத்தில் கூறி உள்ளார்.
- ஒருவருக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
- வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டபோது 1.3 கோடி பேர் பார்வையிட்டனர்.
பூமி, புதையல்களின் சுரங்கம். ஆதிமனிதன் பூமியைத் தோண்டி கிழங்கையும், விதைகளையும் எடுத்து பசியாறினான். தற்கால மனிதர்கள் தோண்டும்போது வரலாற்றையும், பொன்னையும், பொருளையும் தோண்டி எடுக்கிறார்கள்.
வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, சாதாரணமானவர்கள் கூட நிலத்தை தோண்டும்போது ஏதாவது அதிசய பொருட்கள் கிடைக்கலாம். அப்படி ஒருவருக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
'இன்சேன்ரியாலிடிஸ்' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான அந்த வீடியோவில், ஒருநபர் வீட்டுத் தோட்டத்தில் ஆழமாக குழி தோண்டியது காட்டப்படுகிறது. அப்போது ஒருபொருள் தட்டுப்பட, புதையல்போல எண்ணி பக்குவமாக தோண்டியெடுத்தபோது அது சிறிய மருத்துவ கருவிப் பெட்டி போல தெரிந்தது. செல்லரிக்கத் தொடங்கியிருந்த அந்த பெட்டியை சிரமப்பட்டு அந்த நபர் திறக்கிறார். உள்ளே சிவப்பு நிறத்தில் பக்கத்திற்கு 5 என மொத்தம் 10 பொருட்கள் இருந்தன. அவை வெடிகுண்டு போல தோற்றமளித்ததால் அதிர்ச்சியானார்.
அதுகுறித்த வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டபோது 1.3 கோடி பேர் பார்வையிட்டனர். கருத்துப் பகுதியில் அது 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் தொழில்நுட்ப குண்டு போல இருப்பதாக பலரும் கூறி இருந்தனர்.
- கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும்.
- பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், புதிய ஆண்டில் பூமியில் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாபா வங்கா கணித்திருந்தது ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் இந்த ஆண்டில் 3-ம் உலகப்போர் நிச்சயமாக வரும் என கணித்துள்ளார்.
38 வயதான இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என கூறியிருந்தார். அதன்படி 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிக்கோலசின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது கணிப்பில், மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள், அரசியல் படுகொலைகள் நடக்கும், தீமையும், வன்முறையும் இந்த பூமியை கைப்பற்றும். அதிக மழை, பேரழிவு தரும் வெள்ளம் இருக்கும். இதனால் லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடையும். கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும். பணவீக்கம் அதிகரிக்கும். பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும் என அவர் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.