என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Xi Jinping"

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசும் ரஷியாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் சீனாவுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.

    இதுபற்றி மேக்ரான் கூறுகையில், அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்துள்ளேன் என தெரிவித்தார்.

    மேலும் வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறப்பு தூதரை அனுப்புவதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
    • அணு ஆயுதப் போரினால் யாரும் வெற்றி பெற முடியாது என்ற எச்சரிக்கை செய்தியை பதிவு செய்துள்ளார்

    பீஜிங்:

    ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சமாதான யோசனைகளையும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷியாவுக்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், இதுபற்றி பேசி உள்ளார்.

    இந்நிலையில், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, போர் நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வைக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதாக கூறினார். பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என்று கூறிய அவர், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறப்பு தூதரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    அணு ஆயுதப் போரினால் யாரும் வெற்றி பெற முடியாது. அணுசக்தி பிரச்சினையில், சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதியாக இருப்பதுடன், நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உண்மையிலேயே தங்கள் சொந்த நாட்டின் எதிர்கால நலன் மற்றும் மனிதகுலத்தின் நலன்களுக்காக செயல்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையை கூட்டாக கையாள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

    • கொரோனா கட்டுப்பாடு தளர்ந்த நிலையில் 4 வருடத்திற்குப் பிறகு பில்கேட்ஸ் சீனா வருகை
    • அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்அதிபரை சீன அதிபர் சந்திக்க இருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது

    அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்  அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்.

    கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை புரிகின்றனர். அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சீனாவிற்கு கடந்த வாரம் வந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் சீனாவின் பீஜிங் நகருக்கு வந்திருந்த ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சீனாவுடன் ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஒரு இணைதிறனுடைய உறவுமுறை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார்.

    அதேபோல் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சென்ற 3 வருடங்களில் முதல்முறையாக வருகை தந்தார். சீனாவில் விரிவான வணிக ஆர்வமுடைய மஸ்க், சீன ஷாங்காய் நகரில் உள்ள டெஸ்லாவின் மிகப்பெரிய தொழிற்சாலையில் தமது பணியாளர்களை சந்தித்தார்.

    இப்பொழுது உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார். அமெரிக்க நாட்டு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிறன்று சந்திக்க இருக்கும் பின்னணியில் இது மிகவும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை:-

    மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக சீனாவிற்கு இந்த அறக்கட்டளை 50 மில்லியன் டாலர் வழங்கும். கேட்ஸ், பீஜிங் நகராட்சி மற்றும் ட்சிங்குவா பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் (GHDDI) எனப்படும் அமைப்பிற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும்.

    மலேரியா மற்றும் காசநோய் போன்ற பெரும்பாலான உலகின் ஏழை மக்களை தாக்கும் நோய்கள் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகளுக்கு இந்த தொகை உறுதுணையாக இருக்கும். உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனத்தில் பேசிய பொழுது கேட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக சீனா எடுக்கும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

    சீனாவிற்குள் வறுமை ஒழிப்பிலும், ஆரோக்கிய மேம்பாட்டிலும் அந்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சவால்களை சமாளிக்க சீனாவால் பெரிய பங்காற்ற முடியும் என்றும் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

    பில் கேட்ஸ் கடைசியாக 2019-ம் வருடம் வந்திருந்தபோது சீன முதல் பெண்மணி பெங்க் லியுவானை சந்தித்து தமது அறக்கட்டளை மூலமாக ஹெச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பிற்காக செய்யப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அவரிடம் பேசினார்.

    சீன நாட்டு அதிபருடன் வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

    • அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார்.
    • இருதரப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பலப்படும் என நம்பிக்கை தெரிந்தது.

    கலிபோர்னியா :

    கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனது சீன பயணத்தின்போது நேரில் சந்தித்து பேசினார். இதன்மூலம் இருதரப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பலப்படும் என நம்பிக்கை தெரிந்தது. இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தனியார் அமைப்பு சார்பில் தேர்தலுக்கான நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடையே மேடையில் பேசினார்.

    அப்போது தனது உரையின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வதிகாரி என ஜோ பைடன் குறிப்பிட்டார். நவீன பலூனை அமெரிக்காவுக்குள் அனுப்பி அதன் செயல்பாடுகளை சீனா கண்காணித்ததாக அமெரிக்க ராணுவம் குற்றஞ்சாட்டியது. அதனை ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தியதாகவும் அது தெரிவித்தது. இதனை மறுத்த சீன அரசு வானிலையை ஆய்வு செய்வதற்காகவே அந்த பலூனை பயன்படுத்தியதாகவும் அது வழிதப்பி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக கூறியது. இந்தநிலையில் "நம் ராணுவத்தை கொண்டு சீனாவின் சதிதிட்டத்தை தகர்த்த விவகாரம் ஜி ஜின்பிங்கை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கும்" மேலும் "சர்வாதிகாரிகளுக்கு இது பெரிய அடிதான்" என்று அவர் ஜின்பிங்கை தாக்கி பேசினார்.

    • 2017-ல் இந்தியா நிரந்த உறுப்பினர் ஆனது
    • இந்திய ஜனாதிபதி தலைமையில் முதல் மாநாடு

    இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23-வது உச்சி மாநடாடு ஜூலை 4-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்திய பிரதமர் மோடி அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹியா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநட்டின்போது தொடங்கப்பட்டது. 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகின.

    இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொகுதி மற்றும் மிகப்பெரிய நாடுகடந்த சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

    இந்திய ஜனாதிபதி தலைமையின் கீழ் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இந்த அமைப்பிற்கான தலைமை செயலகம் பீஜிங்கில் உள்ளது. அங்கு வடிவமைக்கப்பட்டுள்ள நியூ டெல்லி ஹால்-ஐ ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.

    • 41.5 கோடி பேர் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்
    • போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது- ஜி ஜின்பிங்

    சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம் முதல் சுமார் 41.5 கோடி பேர் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    உடைந்த சோவியத் ஒன்றிய நாடுகளில், பல வருடங்களுக்கு முன் 'நிற புரட்சி' எனப்படும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் கோரும் மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன.

    இதனை போன்று சீனாவில் நடத்த சில அயல்நாட்டு சக்திகள் முயற்சிப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் நுழைவதை சீனா விரும்பவில்லை என சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங் தெரிவித்தார்.

    மேலும் அவர், போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு இளம் தொண்டர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றும் தற்போது வெளிவந்திருக்கிறது.

    அதில் மார்க்ஸிஸ மற்றும் கம்யூனிஸ கொள்கைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் 90-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்டதை போன்று சீனாவிலும் கம்யூனிஸம் அழிந்து, சீனாவும் சுக்குநூறாகி விடும் அபாயம் உள்ளதாக கூறியிருக்கிறார்.

    திரள்திரளாக உறுப்பினர்கள் கம்யூனிஸ கொள்கையிலும் கட்சியிலும் இருந்து விலகியதால்தான் சோவியத் ஒன்றியம் உடைய தொடங்கியது குறிப்படத்தக்கது.

    அதேபோல் சீனாவிலும் நடக்கலாம் என கம்யூனிஸ்ட் கட்சி அச்சப்படுகிறது. நாடு முழுவதும் உள்நாட்டிலும், உலகெங்கிலும் பல நாடுகளுடனும் பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களை சீனா எதிர்கொண்டு வருகிறது.

    கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததே, கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என அக்கட்சி கருதுகிறது.

    ஆனால் மக்களின் குரலுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரான கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கில் மக்கள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்றும் சீனாவில் தற்போது அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்பதற்காகவே கட்சியில் உறுப்பினர்கள் உள்ளனரே தவிர கொள்கைகளுக்காக கட்சியில் இருக்குமாறு அதிபர் விடுத்த அழைப்பிற்கு போதிய வரவேற்பில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    உலக வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியான சீனாவின் ஒரே கட்சியில் இத்தகைய ஆபத்து உருவாகியிருப்பதை அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும்.

    புதுடெல்லி:

    தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. தென் ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசின் அழைப்பின் பேரில் மோடி அங்கு செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும்.

    உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நடைபெறுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் குழுவானது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 5 பொருளாதார நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய அதிபர் புதின் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
    • அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது

    உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு.

    இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது. தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஆனால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்பார் எனவும் ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

    சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, ரஷிய-உக்ரைன் போர் குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாகவும், இரு நாட்டு பொருளாதார உறவில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் காரணாமாகவும், சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அதிபர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது சந்தித்து கொள்வார்கள் என்றும் அப்போது அவர்கள் இருவருக்கும் இடையிலான சிக்கல்களை தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் நம்பப்பட்டது.

    ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிகாரபூர்வமாக சீனா அறிவித்திருக்கிறது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ரெகோபோத் கடற்கரையில் ஜோ பைடனுக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. தற்போது அங்கு சென்றிருக்கும் அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை எனும் அறிவிப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனாலும், அவரை நான் விரைவில் சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், எந்த நாட்டில், எப்போது சீன அதிபரை பைடன், சந்திப்பதாக இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது.
    • சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன.

    uவாஷிங்டன்:

    அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்திலும் சில பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாகவே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.

    சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இரு தலைவர்கள் இடையே நேரடி சந்திப்பு நடைபெறவில்லை.

    இந்நிலையில் அடுத்த மாதம் ஜோ பைடன்-ஜின்பிங் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங்கை தான் சந்திக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் சந்திப்பு குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அந்த சந்திப்பு நடைபெற சாத்தியம் உள்ளது" என்றார்.

    வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியுபெங்யு கூறும்போது, "சீனாவும், அமெரிக்காவும் இரு தரப்பு ஈடுபாடு மற்றும் பரிமாற்றம் குறித்து தொடர்பு கொள்கின்றன. இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட வேண்டும். உறுதியான நடவடிக்கை களுடன் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும். பேச்சுவார்த்தையை மேம்படுத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றார். ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் ஜோபைடன்-ஜின்பிங் சந்திப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    • இந்த மாதம் இறுதியில் நடைபெறும் அபெக் மாநாட்டின்போது சந்திப்பு நடைபெற இருக்கிறது
    • ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நோக்கமாக கொண்டுள்ளோம் என வெள்ளை மாளிகை அறிவிப்பு

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த மாதத்தின் இறுதியில் அபெக் தலைவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார்.

    அப்போது, ஜி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரின் ஜீன்-பியர், நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் ''ஜோ பைடன் இந்த சந்திப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். உங்களுடைய கேள்விக்கு பதில் இருக்கும் என நினைக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

    இந்திய பிரதமர் மோடிக்கும் அபெக் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேபினட் அளவிலான மந்திரி இந்தியா சார்பில் கலந்த கொள்ள வாய்ப்புள்ளது.

    தைவான் தொடர்பான பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

    • 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
    • இரு தலைவர்கள் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சென்றார். சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்றடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    4 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    அமெரிக்கா- சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இரு தலைவர்கள் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அவர்களின் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம், வர்த்தகம், பொருளாதாரம், ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்த ஆபெல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.

    அதன்பின் கலிபோர்னியா சென்ற அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் இரு நாட்டு ராணுவ உறவு, ரஷியா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

    வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்தார்.

    ×