என் மலர்
நீங்கள் தேடியது "Yemen"
- இஸ்ரேலின் மத்திய பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
- ஏமனில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மையப் பகுதி மீது ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டில் மையம் கொண்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் மத்திய பகுதிகளின் மீது நேற்றைய தினம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் மத்திய பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். காசா போருக்கு மத்தியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகினர். கடந்த ஜூலை 19 அன்று இஸ்ரேலின் அமெரிக்க தூதரகம் அருகே நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதிகளின் துறைமுகத்தை இஸ்ரேல் தாக்கி சேதப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹவுதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை பொழிந்துள்ளனர்
ஏமனில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மையப் பகுதி மீது ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் வான் பரப்பிற்குள் வந்த ஏவுகணையை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தாக்கியது. ஆனாலும், ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறின. மேலும், ராக்கெட்டுகளும் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதனால், இஸ்ரேலின் மோடின்[Modiin] ரெயில் நிலையத்தில் பாதிப்பு எற்பட்டது. மேலும், பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த ஏவுகணை தாக்குதலில் காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு எமன் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பாலஸ்தீன போரை எதிர்த்து ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்
- எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் சூளுரைத்துள்ளார்.
லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஒரு வார காலமாக மிகப்பெரிய அளவிலான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. லெபனான் முழுவதும் பரவியுள்ள ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள் வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்துச் சிதறியதால் 35 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. 4000 பேர் வரை படுகாயமடைந்தனர். தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் பெண்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா உயர் கமாண்டர்கள் பலரும் கொல்லப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் உள்ளிட்ட இடங்கள் மீது நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பாலஸ்தீன போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகச் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவை போல ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறனர். எனவே தற்போது ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளைக் குறிவைத்து 1,800 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் எந்த இடமும் எங்களுக்குத் தூரமில்லை. எங்களைச் சீண்டுபவர்களை நாங்கள் அழித்தொழிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட்[Yoav Gallant] சூளுரைத்துள்ளார்.
- செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தனர்
- கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடந்துள்ளது
பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் தரப்பில் இருந்து கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கடலில் வந்த பிரிட்டன் எணணெய் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
கார்டெலியா மூன் [Cordelia Moon] எனப்படும் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகை மோதவைத்து ஹவுதிக்கள் வெடிக்கச்செய்துள்ளனர். ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹுதைதா [Hodeidah] வில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மேலும் கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ள ஹவுதிக்கள் கப்பல் தீப்பற்றி எரியும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
- ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் -இல் ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று டெல் அவிவ் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே ஏவுகணை விழுந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கத் தவறியதால் அது கீழே விழுந்துள்ளது என்றும் இதில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏமனின் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலமுறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
பதிலுக்கு, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது.
செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்கள், டிரோன்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அவ்வப்போது ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள், ஆயுத கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகளை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன.
- சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும், பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது.
ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று [வியாழக்கிழமை] இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடலில் வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கப்பல்களையும் சிறை பிடித்து வருகின்றனர். எனவே அமெரிக்கா உதவியுடன் ஹவுதிகள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில் சுகாதர மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் ஐநா இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.பணிகளை முடித்து நேற்று சனாவில் இவர்கள் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன. நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது.
நானும் என்னுடன் இருந்த ஐநா மற்றும் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம். நாங்கள் புறப்படுவதற்கு முன் விமான நிலையத்தின் சேதம் சரிசெய்யப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.
தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் என்று டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஹூதிகள் பயன்படுத்திய உள்கட்டமைப்பு மற்றும் ஹொடைடா, அல்-சலிஃப் மற்றும் ராஸ் காண்டிப் துறைமுகங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. டெட்ரோஸின் அறிக்கை பற்றிய கேள்விகளுக்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டார். ஐநா பொதுச்செயலாளர் தங்கள் நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மனிதாபிமான நிலைமையை மதிப்பிட டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.
- களத்தில் உள்ள எங்கள் சக ஐநா ஊழியர்களுக்கும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஆபத்தை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது.
பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடலில் வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கப்பல்களையும் சிறை பிடித்து வருகின்றனர். எனவே அமெரிக்கா உதவியுடன் ஹவுதிகள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில் சுகாதர மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.பணிகளை முடித்து நேற்று சனாவில் இவர்கள் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல் கண்டதை டிசம்பர் 26 ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது.
எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது. நானும் என்னுடன் இருந்த ஐநா மற்றும் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம். என்று இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் தாக்குதல் நடந்தபோது தாங்கள் நூலிழையில் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோவை டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக எனக்கு ஏற்பட்ட துயரச் சூழலில் இருந்து நலம் பெற வாழ்த்திய எனது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.
என்னைப் பாதுகாக்க முயன்றபோது தன்னலமற்றவர்களாக இருந்த சக ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.
நாங்கள் மிகவும் ஆபத்தான தாக்குதலை எதிர்கொண்டோம், ஆனால் நானும் எனது சக ஐநா ஊழியர்களும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம். காயமடைந்த எங்கள் சக ஊழியரை மீட்டோம், அவர் உடல்நிலை நிலையாக உள்ளது.
களத்தில் உள்ள எங்கள் சக ஐநா ஊழியர்களுக்கும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஆபத்தை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது. நான் ஜெனீவாவுக்கு வீடு திரும்பும் வழியில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம்.
- கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் blood money குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.
இதற்கிடையே தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் நிலைமையை புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாயார் பிரேமா குமாரி, அவரது உயிரைக் காப்பாற்ற இடைவிடாமல் போராடினார்.
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது நிமிஷா குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்
- 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார்
ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் தாய் கேரளா மற்றும் மத்திய அரசுகளின் உதவியை நாடியுள்ளார். தனது மகளின் மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததையடுத்து செயல்பட அதிக நேரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்துக்குள் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

தாய் வேண்டுகோள்
இந்நிலையில் ஏமனில் இருந்து உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் பேசிய பிரேமா குமாரி, இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மகளுக்கு இன்னும் அதிக நேரம் இல்லை, என்று அவர் கூறினார்.
இந்திய மற்றும் கேரள அரசுகளுக்கும், அவளைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவிற்கும், இதுவரை வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இது எனது இறுதி வேண்டுகோள். தயவு செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்ற உதவுங்கள். நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார். "என்னைப் பார்த்தவுடனே ஓடி வந்து மம்மி என்று என்னைக் கட்டிக் கொண்டாள்.இருவரும் அழுதோம்.ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதோம்.இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறேன்.கடைசியாக அவளைப் பார்த்தது திருமணம் ஆனபோதுதான். அவளை விட்டு விடுங்கள் என்று பிரியாவை சந்தித்த பிறகு தாய் குமாரி தெரிவித்தார்.
2023 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் குமாரி ஏமன் செல்ல அனுமதிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் blood money பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் அவரது மகளை தூக்கில் இருந்து காப்பாற்றவும் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
நிமிஷா கொலை வழக்கு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டு வந்தார்.

ஒரே வழி
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்தது.
தற்போது மரண தண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அழித்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு blood money கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அதை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும் என்று குமாரி மற்றும் நிமிஷாவின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிமிஷாவை தூக்கிலிருந்து இனி காப்பாற்றுவதற்கான ஒரே வழி இதுவே ஆகும். எனவே மத்திய அரசு இதில் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது
- மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவர் மயக்க மருந்து செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மரணதண்டனையை ஏமன் உச்சநீதிமன்றம் 2022 இல் உறுதி செய்தது.
இதற்கிடையே கடந்த மாதம் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததாக கடந்த மாத இறுதியில் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஜனாதிபதி எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
திங்களன்று, இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் கொடுக்கவில்லை.
செவிலியரின் முழு வழக்கும் நாட்டின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் கையாளப்படுகிறது. பிரியா தற்போது தலைநகர் சனாவில் ஹவுதி போராளிகளின் அதிகாரத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய அரசாங்கம் எல்லா உதவிகளையும் அவருக்கு வழங்கி வருகிறது. இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
பாதிக்கப்பட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.
ஏமனில் அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சாடா மாகாணத்தில் சவுதி அரேபியாவின் எல்லையையொட்டி உள்ள அல்-புக்கா நகரில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சவுதி அரேபியாவின் தெற்கு எல்லை மாகாணமான நஜ்ரானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் செய்தி சேனலில், அல்-புக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘யுஎஸ்எஸ் கோல்’ என்கிற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு சென்றது. அதன்படி அங்கு கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.
அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகை ஓட்டிவந்து ‘யுஎஸ்எஸ் கோல்’ கப்பலின் மீது மோதினர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.
இதில் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் குண்டுவெடிப்பில் சிக்கி கப்பலில் இருந்த கடற் படைவீரர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 39 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதியான ஜமால் அல்-படாவி என்பவர் மூளையாக செயல்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்கா போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. இது குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது அந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏமனின் மரிப் மாகாணத்தில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாதிகளின் நிலைகள் மீது கடந்த 1-ந்தேதி அமெரிக்க போர் விமானங்கள் துல்லிய வான்தாக்குதல் நடத்தியது. இதில் ‘யுஎஸ்எஸ் கோல்’ போர்க்கப்பல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதி ஜமால் அல்- படாவி கொல்லப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டரில் கூறுகையில், “யுஎஸ்எஸ் கோல்’ போர்க்கப்பல் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த நமது கதாநாயகர்களுக்கு நம்முடைய சிறப்பான ராணுவம் நீதியை வழங்கிவிட்டது. நமது வீரர்களை கொன்ற பயங்கரவாதி ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டுவிட்டார். அல்-கொய்தாவுக்கு எதிரான நம்முடைய போர் தொடரும்” என தெரிவித்தார். #USAirstrike #Yemen
ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது. இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக இருந்து வருபவர் படாவி.
இவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர். இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பயங்கரவாத இயக்க ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் படாவி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. #YemenDroneStrike #AlQaidaLeader