search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth committed"

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    தஞ்ைச மாவட்டம் கொள்ளுகாது வட்டாட்சி கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சுந்தரராஜ். இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள சிட்கோவில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை சரியில்லாததால் சுந்தரராஜ் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    இது குறித்து அவரது அண்ணன் கோவிந்தராஜ், சுந்தரராஜின் நண்பர் மதன பிரகாஷிடம் தனது தம்பிக்கு வேறு ஒரு வேலை வாங்கித் தருமாறு கூறியிருந்தார். அதன்பேலில் சுந்தரராஜ் சேடப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். அங்கு தங்கியிருந்த சுந்தரராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் கம்பெனி குடோனில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    சேலம் மாவட்டம் வீரக னூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சங்கர் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் டிப்ளமோ படித்து விட்டு கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதயில் ஒரு கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும் பினார்.

    ஆனால் அப்போது இருந்தே சரியாக வேலை செய்ய முடியாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தாராம்.

    இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் நேற்று கம்பெனி குேடானில் திடீரென நைலான் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×