என் மலர்
நீங்கள் தேடியது "YS Sharmila"
- முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லத்தை நோக்கி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் பேரணி சென்றது
- டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை ஷர்மிளா கடுமையாக தாக்கி பேசினார்.
தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, ஆளும் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுவரை சுமார் 3500 கிமீ பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணி முதல்வரின் இல்லத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஷர்மிளா தனது காரில் புறப்பட்டுச் சென்றபோது, வாகனத்தை இழுத்துச்செல்லும் கிரேனை போலீசார் கொண்டு வந்து, அவரது வாகனத்தை இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கிரேன் காரை இழுத்துச் செல்லும்போது அவர் காரில் அமர்ந்திருப்பதையும், அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களும் அவர்களுடன் ஓடுவதையும் காண முடிகிறது.
நேற்று வாராங்கல் பகுதியில் உரையாற்றிய ஷர்மிளா, அந்த தொகுதியின் டிஆர்எஸ் கட்சி எம்எஎல்ஏ பெட்டி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் கட்சியினர், ஷர்மிளாவின் காரை தாக்கினர். பின்னர் ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்தனர். இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த மோதலைத்தொடர்ந்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஷர்மிளாவை போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத் அனுப்பி வைத்தனர்.
- சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும்.
- சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.
திருப்பதி:
தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஷர்மிளா தனது தாயுடன் சேர்ந்து தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வந்தார்.
அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த நிலையில் கடந்த மாதம் பாதயாத்திரை சென்ற ஷர்மிளா மீது முதலமைச்சர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக கூறி அவரது பிரச்சார வாகனத்தின் மீது கற்களை வீசினர்.
பின்னர் பிரசார வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை அனுப்ப உள்ளதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் ஷர்மிளா கூறினார்.
தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். தெலுங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.
இது உண்மை இல்லை என்றால் சந்திரசேகர ராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும். சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.
ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகர ராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாத யாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும்.
இதற்காக தான் ஒரு ஜோடி ஷூக்களை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஷூ சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன்.
தொப்பி அணிந்து கொண்டு தனி விமானத்தில் சுற்றி வராமல் தங்களது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் குறைகள் இன்றி வாழ்ந்தனர்.
பொதுமக்கள் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஆனால் தற்போது முதலமைச்சரை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார்.
- இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
ஐதராபாத் :
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
இவர் பெண்கள் தினத்தையொட்டி, மாநிலத்தில் பெண்கள் மீது நடந்து வருகிற தாக்குதல்களைக் கண்டித்து ஐதராபாத் நகரில் டேங்க் பண்ட் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
அவர் அதன்படி, ராணி ருத்ரமா தேவி மற்றும் சக்காளி அய்லம்மா சிலைகளுக்கு மரியாதை செய்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.
- தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.
ஐதராபாத்:
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலுங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷர்மிளா தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை அவர் சந்தித்து பேசினார். மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
எந்தவித நிபந்தனையும் இன்றி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாலேரு தொகுதியில் ஷர்மிளா போட்டியிடுவார் எனவும், காங்கிரஸ் கட்சிக்காக தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.
இந்த வாரம் சோனியா காந்தி முன்னிலையில் ஷர்மிளா காங்கிரசில் கட்சியை இணைக்க உள்ளார்.
- காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ஒய்.எஸ். ஆர். கட்சியை இணைக்க போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
தெலுங்கானா மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் ஒய்.எஸ். ஷர்மிளா.ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ஒய்.எஸ். ஆர். கட்சியை இணைக்க போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
காங்கிரசுடனும் அவர் நெருக்கம் காட்டி வந்தார். கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமாரையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அவர் இன்று டெல்லியில் சோனியாகாந்தியை திடீரென சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது காங்கிரசுடன் கட்சியை இணைத்து செயல்படுவதா? என்பது தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் ஷர்மிளா சோனியாவை சந்தித்த பேசி உள்ளது. தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கியவர்.
- ஆந்திர மாநில தேர்தல், மக்களவை தேர்தலை கணக்கில் கொண்டு காங்கிரஸ் கட்சி அவரை இணைக்கிறது.
ஆந்திர மாநில முதல்வராகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த ஒரு மாதத்திற்குள், இணைய இருக்கிறார்.
வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள், அக்கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் தங்களுடைய கட்சியில் இணையலாம் என காங்கிரஸ் நம்புகிறது.
- ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
- ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இதையடுத்து, கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை நேரில் சந்தித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்
இந்நிலையில், டெல்லி சென்ற ஒய்எஸ் ஷர்மிளா, ஜனவரி 4-ம் தேதி அகில இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆந்திர முதல் மந்திரியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
- அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
ஐதராபாத்:
ஒய்.எஸ்.ஆர்.டி.பி. தலைவரும், ஆந்திர முதல் மந்திரியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. ஷர்மிளா ஜியோ அல்லது வேறு யாரோ அதைச் செய்ய முடியாது.
யாரேனும் பிரதமராக வேண்டும் என்றால் அதை மக்கள் செய்ய வேண்டும். ராகுல் காந்தியின் பார்முலா தோல்வி. ராகுல் காந்தியின் சித்தாந்தம் தோல்வி. அவரது பார்முலா அடிப்படையில் தோல்வி அடைந்துள்ளது என தெரிவித்தார்.
- அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
- தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் .
திருப்பதி:
ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ். சர்மிளா நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என எனது தந்தை கனவு கண்டார். அவரது கனவை நிறைவேற்ற அவர் வாழ்ந்த கட்சியான தாய் வீடான காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன்.
நாட்டின் மிகப்பெரிய மத சார்பற்ற கட்சி காங்கிரஸ். காங்கிரஸில் தனக்கு வழங்கப்படும் எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்தார்.
- கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
ஐதராபாத்:
ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.சர்மிளா இன்று சந்தித்துப் பேசினார்.
- ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார் ஷர்மிளா
- திங்கள் அன்று கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார்
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா (YS Sharmila), தனது சகோதரருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் 2021 ஜூலை மாதம் அவரது கட்சியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து, ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (YSR Telangana Party) எனும் புதிய கட்சியை தொடங்கினார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார்.
கடந்த திங்கட்கிழமையன்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு (Gidugu Rudra Raju) தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை, ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், இன்று ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர அரசியலில் சகோதரன்-சகோதரி போட்டி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் ஆந்திராவில், காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை.
- நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் இன்று ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி தலைமையில் மாநில அரசின் தலைமை செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தை தடுக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இருந்து வெளியே வராதபடி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் வீட்டுக்காவலை தவிர்க்கும் முயற்சியாக ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கினார்.

இதுகுறித்து விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்கள், வேலையில்லாதோர் மற்றும் மாணவர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார். வேலையற்றோர் சார்பாக நாங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சி செய்வது கண்டிக்கதக்கது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா? இது வெட்கக்கேடானது. ஒரு பெண்ணாக நான் வீட்டுக் காவலை தவிர்க்க காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.