search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ரூனே 4-வது சுற்றுக்கு முன்னேறினர்
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ரூனே 4-வது சுற்றுக்கு முன்னேறினர்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரான்ஸ் வீரர் குயிண்டென் ஹேல்ஸ் உடன் மோதினார். இதில் 1-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×