என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
- பல சேவைகளை ஒரே இடத்தில இச்செயலி வழங்கவுள்ளது.
இந்திய ரெயில்வே 'ஸ்வாரெயில்' [SwaRail] என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் கிடக்கும் வண்ணம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே தகவல் அமைப்பு (CRIS) உருவாக்கிய இந்த செயலி தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். விரைவில் முறையாக செயலி மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
ஆன்லைனில் முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங் (UTS), ரெயில் டிக்கெட் புக்கிங், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பெறுவது, சீசன் பாஸ்களை நிர்வகிப்பது, PNR ஸ்டேட்டஸ் செக்கிங், இருக்கை கிடைப்பதை சரிபார்ப்பது, ஐஆர்சிடிசி கேட்டரிங் உணவு ஆர்டர், ரெயில்வே அட்டவணை விசாரணைகள், ரெயில் ரன்னிங் ஸ்டேட்டஸ், ரெயில் தேடல், பெட்டிகள் அமைப்பு, பயணச்சீட்டு, பார்சல் மற்றும் சரக்குக் கண்காணிப்பு, குறைகளைத் தீர்ப்பதற்கான ரெயில் மடாட் சேவை உள்ளிட்ட பல சேவைகளை ஒரே இடத்தில இச்செயலி வழங்கவுள்ளது.
இதனால் இதற்கென ஏற்கனேவே தனித்தனியே இருக்கும் செயலிகளை போனில் வைத்திருக்க வேண்டிய அவசியம் குறைவதால் போனில் இடம் மிச்சமாகும். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த சேவைகள் மேலும் ஸ்வாரெயில் செயலியில் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
- அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன. இந்நிலையில் நாளை [பிப்ரவரி 1] முதல் பலரின் யுபிஐ ஐடி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் [@,#, * உள்ளிட்ட] சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா[NPCI] அறிக்கை வெளியிட்டுள்ளது.
எண்ணெழுத்து [0-9] மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடிகள் மட்டுமே செயல்படும் என கூறப்பட்டுள்ளது. சிறப்பு எழுத்துக்கள் உள்ள ஐடிகள் பிளாக் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுவதும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று NPCI அறிவுறுத்தியுள்ளது.
என்பிசிஐ தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் 16.73 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது நவம்பரின் பதிவான 15.48 பில்லியன் பரிவர்த்தனைகளைவிட விட 8% அதிகமாகும்.
- சிறப்பாக செயல்பட்டதாக அலிபாபா தெரிவித்துள்ளது.
- தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.
சீனாவை சேர்ந்த அலிபாபா தனது ஏ.ஐ. மாடல் Qwen2.5 Max-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏ.ஐ. மாடல் தற்போது அதிக பிரபலமாக இருக்கும் டீப்சீக் ஏ.ஐ., ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் GPT-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயல்பட்டது என அலிபாபா தெரிவித்துள்ளது.
இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "Qwen 2.5-Max ஏ.ஐ. மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஐ விட சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியுள்ளது.
சர்வதேச ஏ.ஐ. தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், அலிபாபா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், டீப்சீக் நிறுவனத்தின் R1 ஏ.ஐ. மாடல் சிலிகான் வேலியை ஆட்டம் காண செய்ததோடு, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை சரிய செய்தது.
டீப்சீக்-இன் ஏ.ஐ. மாடல் அதிவேகமாக பிரபலம் அடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5 Max ஏ.ஐ. மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) நாடு முழுவதும் ஒரே நேரத்தை கண்க்கிட NavIC ஐ பயன்படுத்தும்.
- பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது
நாடு முழுவதும் Indian Standard Time (IST) நேரத்தை கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு விதிகள் குறித்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது
இந்த புதிய வரைவு விதிகள் அதிகாரப்பூர்வ, வர்த்தக, நிதி, நிர்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் Indian Standard Time -யை மட்டுமே பின்பற்ற வலியுறுத்துகிறது.
Indian Standard Time -யை தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
நாடு முழுவதும் ஒரே நேரக் குறிப்புகளை வழங்குவதற்காக தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL), இந்திய விண்மீன்கள் நேவிகேஷன் அமைப்புடன் [Navigation with Indian Constellation system] (NavIC) உடன் இணைக்கட உள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள இந்த தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) நாடு முழுவதும் ஒரே நேரத்தை கண்க்கிட NavIC ஐ பயன்படுத்தும்.
அதன்மூலம் பெறப்பட்ட நேர தரவுகளை அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் கௌஹாத்தியில் உள்ள நான்கு மையங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்புகள் வழியாக அனுப்பும். அனுப்பப்படும் தரவுகளின் துல்லியத்தை கணக்கிட இந்த மையங்களில் அணு கடிகாரங்கள் [ ATOMIC CLOCK ] நிறுவப்படும்.
அணு கடிகாரங்கள் என்பது அணுக்களின் அசைவுகளை[அலைவுகள் - Oscillation] பயன்படுத்தி நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கருவியாகும். உதாரணமாக சீசியம்-133 ன் அணுக்கள் நொடிக்கு பல கோடி முறை அசைகின்றன. இந்த எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கின்றன. இதை கணக்கிடுவதன் மூலம் துல்லியமாக நேரம் கிடைக்கிறது.
எனவே துல்லியமான நேரம் காட்டும் அளவுகோலாக அணுக் கடிகாரம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒரே நாடு ஒரே நேர திட்டத்தை செயல்படுத்த இந்த அணு கடிகாரம் பயன்படுத்தப்பட உள்ளது.
சாமீபத்திய வளர்ச்சியாக அணு கடிகாரத்தை விட துல்லியமான அணுக்கரு [Atomic nucleus] கடிகாரத்தை பயன்படுத்த சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்மூலம் பிரபஞ்சத்திலுள்ள கரும்பொருள் (Dark matter) போன்ற பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். கோடிக்கணக்கான ஆண்டுகள் ஓடினாலும் ஒரு நொடியைக்கூட தவறவிடாத கைக்கடிகாரமாக அது இருக்கும்.
- இந்தியாவில் செயல்பட GMPCS உரிமம் (செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமம்) தேவை.
- ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும்.
இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு விதித்திருந்தது.
அதன்படி பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ஸ்டார்லிங்க்-ன் அணுகலை வழங்கவும் வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இன்னும் ஸ்டார்லிங்க் எழுத்துப்பூர்வமாக இதை உறுதி செய்யவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும்.
ஸ்டார்லிங்க் வருகை இந்தியாவில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன.
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] தொழில்நுட்பத்தின் அமெரிக்க நிறுவங்கள் மட்டுமே வல்லாதிக்கம் செலுத்திவந்த நிலையில் சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் (Deepseek) அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ மாடல் அமெரிக்க நிறுவனங்களைக் கதிகலங்க வைத்துள்ளது.
டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
இதனால் சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான டவுன்லோட்களை கடந்துள்ளது. டீப்சீக் ஏஐ அறிமுகம் பங்குசந்தையிலும்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் நேற்று [திங்கள்கிழமை] பூகம்பத்தை சந்தித்துள்ளன.
என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ ரூ.9.34 லட்சம் கோடி] இழந்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 589 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.
டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது. என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் உடைய சொத்துமதிப்பில் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் [20.1 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.
Oracle Corp இணை நிறுவனர் லேரி எலிசன் உடைய சொத்தில் 12 சதவீதம் [22.6 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்து தயாரித்துள்ள நிலையில் டீப்சீக் நிறுவனம் 6 மில்லியன் டாலர்களில் அதை உருவாகிவிட்டது.
டீப்சீக் உடைய தாக்கம் தொடர்வதால் முதலீட்டாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர். டீப்சீக் வருகை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று டிரம்ப் கூறியுள்ளார்
- டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன.
இந்நிலையில் அவற்றுக்கு சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது. இது ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).
இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வாராத ஆர்1 ஜீரோ தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும். அமெரிக்க நிறுவனங்களை விட குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும். தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.
மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுக்கத்தில் உள்ளன. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.
மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த நிலையில், டீப்சீக் தளத்தை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, டீப்சீக் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் பதிவு முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
- ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.
- Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே App-ல் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ் அப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளது.
இதன்மூலம், Account-ஐ ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் ஏற்கனவே ஸ்விட்ச் அக்கவுண்ட் என்கிற ஆப்ஷன் உள்ளது. அதில் நுழைவதன் மூலம் மற்றொரு வாட்ஸ் அப் அக்கவுண்டுக்குள் நுழைய முடியும்.
ஆனால் இது இன்ஸ்டாவில் வருவது போன்று ஒரே வாட்ஸ் அப் கணக்கின் மூலம் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சமாக விரைவில் வர இருக்கிறது.
- ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது .
- மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. மென்பொருள் தொழில் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] உள்ளிட்டவற்றின் வருகையால் மாற்றம் கண்டுவரும் நிலையில் ஜோஹோ நிறுவனத்திலும் இந்த மாற்றம் நிகழ்கிறது.
தொடர்ந்து ஜோஹோ இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ், ஜோஹோ US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.
ராஜேஷ் கணேசன் ManageEngine பிரிவையும், மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
A new chapter begins today. In view of the various challenges and opportunities facing us, including recent major developments in AI, it has been decided that it is best that I should focus full time on R&D initiatives, along with pursuing my personal rural development mission.…
— Sridhar Vembu (@svembu) January 27, 2025
- இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல
- ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று டிரம்ப் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார்.
ஓபன் ஏஐ, ஜப்பானிய நிறுவனமான SoftBank மற்றும் மைக்ரோசாஃப்டின் கிளவுட் நிறுவனமான Oracle ஆகியவற்றின் பங்களிப்பில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டமே ஸ்டார்கேட்.
ஸ்டார்கேட் திட்டம் மூலம் மேற்கூறிய நிறுவனங்கள் உதவியுடன் அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.
ஆனால் எக்ஸ், ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளரும் டிரம்பின் கூட்டாளியுமான எலான் மஸ்க், அவர்களிடம் [அந்த நிறுவனங்களிடம்] அவ்வளவு பணம் இல்லை என்று எக்ஸ் பதவில் தெரிவித்திருந்தார். SoftBank நிறுவனம் 10 பில்லியன் வரை தரும், ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று மஸ்க் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.
They don't actually have the money
— Elon Musk (@elonmusk) January 22, 2025
இந்நிலையில் CNBC செய்தி நிறுவன நேர்காணலின் போது, மஸ்க்கின் கூற்றுகளுக்கு பதிலளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா, என்னால் 80 பில்லியன் டாலர்கள் வரை [ஸ்டார்கேட் திட்டத்தில்]செலவழிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பலாம். இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல, ஆனால் நிஜ உலகத்திற்காக பயனுள்ள விஷயங்களை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் கருத்தை ஓபன் ஏஐ சிஇஓ சால்ம் ஆல்ட்மேனும் நிராகரித்துள்ளார். ஸ்டார்கேட் திட்டத்திற்கான ஏஐ பரிசோதனையை வேலைகள் ஏற்கனவே தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், அதை மஸ்க் வந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
wrong, as you surely know.want to come visit the first site already under way?this is great for the country. i realize what is great for the country isn't always what's optimal for your companies, but in your new role i hope you'll mostly put ?? first.
— Sam Altman (@sama) January 22, 2025
- வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
- பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது. அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும்.
- இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி.
- நிதி சார்ந்த சேவைகளை ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்று பாரதி ஏர்டெல். இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் ஒன்றிணைந்து நிதி சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்காக கூட்டணி அமைத்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டணி மூலம், ஏர்டெல் நிறுவனம் பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் நிதி சார்ந்த சேவைகளை அதன் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் வழங்கும். பின்னர் அதன் நாடு தழுவிய கடைகள் மூலம் வழங்கும்.
டிஜிட்டல் சொத்துக்களின் ஒருங்கிணைந்த வலிமை, ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஊடுருவலை ஆழப்படுத்த இந்த திட்டம் உதவும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. கூட்டணியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் தரவு தனியுரிமை - பாதுகாப்பு, தடையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்யும்.
இந்தக் கூட்டாணி ஏர்டெல்லின் 375 மில்லியன் வாடிக்கையாளர் தளத்தையும், 12 லட்சத்திற்கும் அதிகமான விநியோக வலையமைப்பு, பஜாஜ் ஃபைனான்ஸ்-இன் 27 சேவைகள் மற்றும் 5,000-க்கும் அதிக கிளைகள் மற்றும் 70,000 கள முகவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தொகுப்பையும் ஒன்றிணைக்கிறது.