ஆன்மிக களஞ்சியம்

இறைவன் கோடி லிங்கமாக தரிசனம் தந்த கோடீஸ்வரர் திருக்கோவில்

Published On 2024-08-02 11:56 GMT   |   Update On 2024-08-02 11:56 GMT
  • அற்புதமான சிவஸ்தலம். அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.
  • மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.

அற்புதமான சிவஸ்தலம். அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.

மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.

ஒரு சமயம் ஹேரண்ட முனிவர் காவிரியில் மூழ்கி இந்த தலத்தில் வெளியே வந்தார்.

இன்னொரு சமயம் திருவலம் சுழியிலுள்ள காவிரி படுகைக்குள் இறங்கி, மறைந்து போனவர், இந்த கோடீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்து நின்று தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு அத்தாட்சியாக கொண்ட முனிவரின் திரு உருவம் இந்தத் திருக்கோவிலில் அமைந்திருக்கிறது.

முன்பொரு சமயம் இந்த இடம் ஆமணக்கு காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் இருந்ததால் இந்த ஊருக்கு கொட்டையூர் என்ற பெயர் ஏற்பட்டது.

சோழ மன்னன் ஒருவன் தன் மீது கொண்ட அளவற்ற பக்தியைக் கண்டு இறைவன் கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்த ஸ்தலம் என்று பெருமைப்பட்ட ஸ்தலம்.

இதனால் இன்றைக்கு கோடீஸ்வரம் என்று பெயர் வழங்கி வருகிறது.

Tags:    

Similar News