இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 18 பிப்ரவரி 2025
- கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா.
- முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-6 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி நாளை காலை 6.13 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: சித்திரை காலை 6.57 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா. ராமநாதபுரம் செட்டித்தெரு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் உற்சவம் ஆரம்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோ வில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருவேல்வேலி சமீபம் 3-ம் நவ திருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-சுபம்
மிதுனம்-ஜெயம்
கடகம்-நன்மை
சிம்மம்-ஆதரவு
கன்னி-ஆக்கம்
துலாம்- வரவு
விருச்சிகம்-தெளிவு
தனுசு- நிறைவு
மகரம்-போட்டி
கும்பம்-நற்செய்தி
மீனம்-நலம்