இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 9 பிப்ரவரி 2025
- அரிட்டாய நாயனார் குருபூஜை.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-27 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி இரவு 8.47 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 7.17 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் காலை தங்கப் பல்லக்கு சுவாமி அம்பாள் விருஷப சேவை. கோவை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். காஞ்சி ஸ்ரீஉலகளந்தப் பெருமாள் பவனி வரும் காட்சி. அரிட்டாய நாயனார் குருபூஜை, சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்டேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிகளில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-சுகம்
கடகம்-சுபம்
சிம்மம்-செலவு
கன்னி-தாமதம்
துலாம்- உண்மை
விருச்சிகம்-களிப்பு
தனுசு- உழைப்பு
மகரம்-சுகவீனம்
கும்பம்-பொறுமை
மீனம்-பயணம்