லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

Published On 2016-12-30 08:52 IST   |   Update On 2016-12-30 08:52:00 IST
டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றும் அனைவருக்கும் உகந்த சத்தான சுவையான பனிவரகு கஞ்சியை செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பனிவரகு - ஒரு கப்,
கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்  
பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க :

கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
பூண்டுப் பல் - 2,
பச்சை மிளகாய் - ஒன்று (கீறியது),
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது (நசுக்கியது),

செய்முறை :  

* கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகை ஒன்றிரண்டாக உடைத்தது கொள்ளவும்.

* பனிவரகு அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் சேர்த்துக் சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, கேரட் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

* கொதி வந்ததும் பனிவரகு அரிசியை சேர்த்து, 3 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, மிளகுத்தூள் தூவி, தேங்காய்ப் பல் சேர்த்து அலங்கரித்து சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.

* சத்தான சுவையான பனிவரகு கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News