உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேர் சாவு

ஆலங்குளம் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேர் சாவு

Published On 2023-09-19 14:23 IST   |   Update On 2023-09-19 14:23:00 IST
  • குடும்பத்தகராறு காரணமாக ராஜேஸ்வரன் கடந்த 14–ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
  • கண்ணனை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அம்பலவாசக தெருவை சேர்ந்தவர் மணிராஜ். இவரது மகன் ராஜேஸ்வரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 14–ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கண்ணன் (38). லாரி டிரைவர். நேற்றிரவு கண்ணன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அவரை உறவினர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் இறந்தார்.

Tags:    

Similar News