உள்ளூர் செய்திகள்
ஊத்துக்குளியில் வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு
ஊத்துக்குளி வட்டார கிராமப்புற பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஊத்துக்குளி :
திருப்பூர் ஊத்துக்குளி சாலப்பாளைத்தில் குழந்தைசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தநிலையில் தோட்டத்திற்குள் உள்ள ஆட்டு பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் கடித்து 10 செம்மறியாடுகள் உயிரிழந்தன.
இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றது. ஊத்துக்குளி வட்டார கிராமப்புற பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும்பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.