கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் மருத்துவர்கள் தின விழா
- மருத்துவர்கள், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் உணவு முறைகள் பற்றியும் எடுத்து கூறினர்.
- இவ்விழாவில் மருத்து வர்கள் சந்தோஷ், முத்தமிழ் மற்றும் புனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்து வர்கள் தினம் கொண்டா டப்பட்டது.
இவர்களின் சேவைகளைப் பாராட்டி பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
மருத்துவர்கள், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் உணவு முறைகள் பற்றியும் எடுத்து கூறினர்.
இவ்விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகி யோர் தலைமை தாங்கினர்.
இவ்விழாவில் மருத்து வர்கள் சந்தோஷ், முத்தமிழ் மற்றும் புனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணை ப்பாளர் புவனேஸ்வரி முன்நின்று கவனித்துக் கொண்டார்.
மேலும் ஒருங்கிணை ப்பாளர்கள் குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.