உள்ளூர் செய்திகள்

பள்ளியை நிரந்தரமாக மூடக்கோரி கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

Published On 2025-02-15 11:32 IST   |   Update On 2025-02-15 11:32:00 IST
  • நல்லவாடு கிராமத்தில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
  • புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், உரிய விசாரணை முடியும் வரை பள்ளியை நிரந்தரமாக மூடக்கோரி புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

அவர்கள் நல்லவாடு கிராமத்தில் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் மற்றும் பிறர் யாரையும் அனுமதிக்க வில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து போராட்டம் தீவிரமடையும் என தெரிகிறது.

Tags:    

Similar News