உள்ளூர் செய்திகள்
இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து அரசு பள்ளி இளநிலை உதவியாளர் ராஜினாமா
- அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
- இளநிலை உதவியாளர் சிவா அடிக்கடி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறுவார்.
கரூர்:
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் சிவா (வயது 43) தனது பணியை ராஜினாமா செய்தார்.
இளநிலை உதவியாளர் சிவா அடிக்கடி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறுவார். 20 நாள் மருத்துவ விடுப்பில் இருந்து அவர் திரும்பிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.