உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

Published On 2025-02-21 11:59 IST   |   Update On 2025-02-21 11:59:00 IST
  • பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஈரோடு, 46 புதுவை சேர்ந்த தண்டபாணி (55) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் தண்டபாணி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் தண்டபாணியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News