கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து பேசிய காட்சி.
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் இலக்கியக் கருத்தரங்கம்
- தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
- பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துரையாற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் குறித்தும், கோதைநாயகி குறித்தும், மகாலிங்கம் குறித்தும், சின்னப்பபாரதி குறித்தும் படைப்பாற்றல், எழுத்தாற்றல், பண்மு கத்திறன், கவித்திறன் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துரையாற்றப்பட்டது.
முன்னதாக அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் திருக்குறள் நடனம் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) பவானி, தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் எழிலரசு, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன், அரசு ஆடவர் கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பழனிவேலு, அரசு ஆடவர் கலைக் கல்லூரி விரிவுரையாளர் பேகம்,
கலைமகள் ஆசிரியர் சி.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகன்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழறிஞருமான கோவிந்தசாமி, தமிழ் வளர்ச்சித் துறையின் தமி ழ்ச்செம்மல் விருதாளர்கள் கருமலைத் தமிழாழன், ராசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.