உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியை டி.ஆர்.ஓ. கவிதா தொடங்கி வைத்தார். 

வாழப்பாடியில் வருவாய்த்துறை ஜமாபந்தி தொடங்கியது

Published On 2023-05-17 13:28 IST   |   Update On 2023-05-17 13:28:00 IST
  • வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் ‘ஜமாபந்தி’ முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
  • இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிலவரி கணக்குகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் 'ஜமாபந்தி' முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை) கவிதா தலைமையில் நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில், பேளூர் வருவாய் குரு வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களின், நிலவரி கணக்குகள் மற்றும் நில உடமை ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா கோரி 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

பேளூர் பேரூராட்சியில் குடியிருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க கோரியும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News