உள்ளூர் செய்திகள் (District)

நீர் பிடிப்பு பகுதியில் மழை- முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2024-07-14 05:47 GMT   |   Update On 2024-07-14 05:47 GMT
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.
  • அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

கூடலூர்:

பருவமழை தொடங்கிய போதும், முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 991 கன அடியாக அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.95 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 51.86 அடியாக உள்ளது. 838 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.

அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

அரண்மனைப்புதூர் 1.6, வீரபாண்டி 4.8, பெரியகுளம் 2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 3, வைகை அணை 2.4, போடி 2.2, உத்தமபாளையம் 1.4, கூடலூர் 4.2, பெரியாறு 24.4, தேக்கடி 17, சண்முகாநதி அணை 2.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News