உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-14 12:35 IST   |   Update On 2023-02-14 12:35:00 IST
  • மாநகா் மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனா்.
  • மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது.

திருப்பூர் :

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருப்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.மாநகராட்சி துணை மேயா் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி, மாநகா் மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:- மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு நிறுவனங்களை பாதுகாக்க எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக அந்நிய செலாவணியை ஈட்டி தரக்கூடிய திருப்பூா் பின்னலாடைத் துறையை பாதுகாக்க எந்த ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது என்றனா். 

Tags:    

Similar News