உள்ளூர் செய்திகள் (District)

தக்கலை அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2022-09-02 10:30 GMT   |   Update On 2022-09-02 10:30 GMT
  • தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

தக்கலை அருகே பள்ளியாடி பழையகடை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகள் அஜிஸ் மோள் (வயது22).கல்லூரி மாணவியான இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் பல இடங்களில் தேடியும் காணவில்லை. பதறிப்போன தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News