அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
- வேளாண்மைத்துறை அதிகாரி தகவல்
- மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால் நஞ்சற்றவிளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட வே ளாண்மை இணை இயக்கு னர் வாணி (பொறுப்பு) வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம் பூச்சிக் கொல்லி ஆகியவற்றைத் தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்ப டுவதோடு, மண வளத்தை யும பாது காக்கும் சாகுபடி முறையாகும்.
அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச் செய்து அதில் உள்ள ஊட்டச் சத்துக்களை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன, நுண்ணுயிர்கள் ஊட்டச் சத்துக்களை மொதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால் நஞ்சற்றவிளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
மக்களின் உடல் நலத்தை காக்கவும் மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும் நீடித்த நிலையான வேளாண் மையினை உறுதிபடுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 14-ந் தேதி வெளியிட்டார். இயற்கை விவசாயம் செய்யும் தன் னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2023-2024-ம் ஆண்டு பட்ஜெட்டில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயி களையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழக்கப் படும் என அறிவிக்கப்பட்டது.
நம்மாழ்வார் விருது பெற விம்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும், குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்- அமைச்சர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2,5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன் றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப் புள்ள பதக்கம் வழங்கப்ப டும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான வழிமுறைகள் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வே ளாண்மை உதவி இயக்கு னர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள லாம். குமரி மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்க லாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.