உள்ளூர் செய்திகள்

ரூ.18 கோடி சொத்துக்கள் மீட்பு

Published On 2023-07-15 13:09 IST   |   Update On 2023-07-15 13:09:00 IST
  • அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது

கன்னியாகுமரி, ஜூலை.15-

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 36 சென்ட் பரப்பளவு உள்ள தானிய களஞ்சியம் கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் கலைய ரங்கம் அருகில் அமைந்து உள்ளது. இந்த இடம் தனிப்பட்ட நபர் கையில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்த சொத்தை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பல வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில் நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப் பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வாளர் சுஜித், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.

இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 கோடி ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சொத்தை இந்து சமய அறநிலைய துறையினர் கையகப்படுத்தும் போது கன்னியா குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

Tags:    

Similar News