உள்ளூர் செய்திகள் (District)

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2023-10-24 09:15 GMT   |   Update On 2023-10-24 09:15 GMT
  • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் ஆரூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சரவணன்(வயது27) என்பவர் வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News