உள்ளூர் செய்திகள்

கைதான 2 பேர்.

அனுமதியின்றி 'பார்' நடத்திய 2 பேர் கைது

Published On 2022-12-19 14:54 IST   |   Update On 2022-12-19 14:54:00 IST
  • மதுரையில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி ‘பார்’ நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக பார் செயல்படுவதாக தகவல் வந்தது. இது தொடர்பாக விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமை யிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஜெய்ஹிந்த்புரம் டாஸ்மாக் கடைக்கு அருகில் சட்ட விரோதமாக பார் இயங்கி வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி பார் நடத்தியதாக பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 61), சோலையழகுபுரம், ராமமூர்த்தி நகர் பன்னீர்செல்வம் ( 49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய தினகரன் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News