உள்ளூர் செய்திகள்

சங்காபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.

ராமதேவம் பொன்காளியம்மன், கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-07-12 15:03 IST   |   Update On 2023-07-12 15:03:00 IST
  • ராமதேவம் மகாகணபதி , பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, வாழையடி முத்துசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார்கள் மற்றும் பரி வார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 47 நாட்க ளாக தொடர்ந்து மண்டலா பிஷேகம் நடைபெற்று வந்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் மகாகணபதி , பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, வாழையடி முத்துசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார்கள் மற்றும் பரி வார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 47 நாட்க ளாக தொடர்ந்து மண்டலா பிஷேகம் நடைபெற்று வந்தது. இன்று 48 நாள் மண்டலபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளா கத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர்களை போட்டு வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதைத் தொடர்ந்து பொன்காளி யம்மன், கருப்பணசாமி, வாழையடி முத்துசாமி மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு பால் , தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்ச னம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்க ளும், குடிப்பாட்டு மக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

மண்டலாபிஷேக விழா வில் கலந்து கொண்ட பக்தர் கள் மற்றும் குடிப்பாட்டு மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவுக்கான ஏற்பா டுகளை குடிப்பாட்டு மக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News