உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே வெல்டிங் பட்டறை தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை

Published On 2023-05-16 12:52 IST   |   Update On 2023-05-16 12:52:00 IST
  • சரவணன்(வயது 38). இவர் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
  • இரவு வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய பிறகு, அங்கிருந்த ஒரு அறையில் சரவணன் தூக்கு போட்டுக் கொண்டார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன்(வயது 38). இவர் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி சுசீலா (33). இவர்களுக்கு சுசீந்திரன் (8), ரோகித் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் உடல்நிலை பாதிப்பால் விரக்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்த அனைவரும் தூங்கிய பிறகு, அங்கிருந்த ஒரு அறையில் சரவணன் தூக்கு போட்டுக் கொண்டார். இரவில் திடீரென எழுந்த சுசீலா, சரவணன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சரவணன் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணனின் மனைவி சுசீலா பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News