உள்ளூர் செய்திகள்

கடலூர் அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதை அண்ணா மேம்பாலத்தில் இருந்து பொதுமக்கள் எட்டி பார்ப்பதை படத்தில் காணலாம்.

கடலூர் கெடிலம் ஆற்றில் மூதாட்டி பிணம்: போலீசார் விசாரணை

Published On 2023-09-22 15:23 IST   |   Update On 2023-09-22 15:23:00 IST
  • கெடிலம் ஆற்றின் தண்ணீர் இல்லாத கரைப்பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
  • பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர்:

கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா பாலம் உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள் ஏராளமானோர் கெடிலம் ஆற்றில் திரண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கெடிலம் ஆற்றின் தண்ணீர் இல்லாத கரைப்பகு தியில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இந்த தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இறந்த நிலையில் கிடந்த மூதாட்டி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எப்படி இறந்தார்? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் 

Tags:    

Similar News