உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே கொட்டக்குடி ஆற்றில் முதியவர் பிணம்

Published On 2022-12-10 10:58 IST   |   Update On 2022-12-10 10:58:00 IST
அடிக்கடி மது குடித்து விட்டு சுற்றி திரிந்த அவர் வறட்டாறு பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தார்.

தேனி:

தேனி அருகே மின் மயானம் பகுதியில் உள்ள கொட்டக்குடி ஆற்று தடுப்பணையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.

இது குறித்து வீரபாண்டி வி.ஏ.ஓ. மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம் அருகே அ.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சின்னராமு (60). இவர் பஞ்சர் கடை நடத்தி வந்தார். அடிக்கடி மது குடித்து விட்டு சுற்றி திரிந்த அவர் வறட்டாறு பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News