உள்ளூர் செய்திகள்

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளாவுக்கு 3 சிறப்பு ரெயில்கள்

Published On 2024-09-13 06:57 GMT   |   Update On 2024-09-13 06:57 GMT
  • ஓணம் பண்டிகையை யொட்டி சிறப்பு ரெயில் அறிவிப்பு.
  • கேரளாவுக்கு 3 சிறப்பு ரெயில்கள்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06161) மறுநாள் காலை 8.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06163) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு கண்ணூா் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து திங்கட்கிழமை (16-ந்தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரெயில்கள் பெரம்பூா், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, ஷொரனூா், திரூா், கோழிக்கோடு, வடகரை வழியாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06160) நாளை காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

இந்த ரெயில் மறுமாா்க்கமாக இயக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News