உள்ளூர் செய்திகள்

தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2022-09-27 10:20 GMT   |   Update On 2022-09-27 10:20 GMT
  • பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.
  • சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

ஊட்டி

தமிழகத்தில் பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு தரப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

ஒரு பஸ்சில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வருகிற 30-ந் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

Similar News