உள்ளூர் செய்திகள்

ரமலான் சிறப்பு தொழுகை

Published On 2023-04-22 12:35 IST   |   Update On 2023-04-22 12:35:00 IST
  • அரக்கோணம் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா பள்ளிவாசல் திடலில் நடத்தப்பட்டது.
  • ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, மேல்விஷாரம் மசூதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர். ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதியில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.

அரக்கோணம் சுவால்பேட்டையில் ஜாமியா மஸ்ஜித் ஈக்கா பள்ளிவாசல் திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலைமை அஸ்ரத் ஹாஜி.கமாலுதீன் தலைமையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா பள்ளிவாசல் திடலில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News