உள்ளூர் செய்திகள்

சந்தனக்கூடு திருவிழா

Published On 2022-12-13 07:17 GMT   |   Update On 2022-12-13 07:17 GMT
  • கமுதி அருகே சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
  • இதில் பாரம்பரிய நடனம் ஆடி இளைஞர்கள் அசத்தினர்.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மகான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு பள்ளி வாசல் தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சந்தனக்கூடு நகரின் முக்கிய வீதிகள் வழி யாக வந்தது. அப்போது இளைஞர்கள், பெரிய வர்கள், சிறுவர்கள் சந்தன கூடு விழாவிற்கு ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடலுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.

களிகம்பு நடனத்தில் முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும், களிகம்பு நடனமாடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர்.

Tags:    

Similar News