உள்ளூர் செய்திகள்

உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கம்

Published On 2022-11-25 14:00 IST   |   Update On 2022-11-25 14:00:00 IST
  • உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது.
  • உலக மரபு வார விழா நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்

தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தியது. கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்த் வரவேற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கை தாவரங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தடயங்கள் பற்றியும், ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ், கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும், கல்லூரியின் முதலாமாண்டு மாணவி சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்ககால தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பற்றியும் படங்களுடன் விளக்கினர். உதவிப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News