உள்ளூர் செய்திகள்

ஓசூரில் ஸ்கிராப் குடோனில் பயங்கர தீ விபத்து: பொருட்கள் சேதம்-பரபரப்பு

Published On 2025-02-13 10:27 IST   |   Update On 2025-02-13 10:27:00 IST
  • சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
  • தீ விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியை சேர்ந்தவர்கள் சம்பங்கி ராமையா மற்றும் ரமேஷ் பாபு. இவர்கள் உறவினர்கள் ஆவர். இவர்களுக்கு சொந்தமான ஸ்கிராப் குடோன் அதே பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான பழைய இரும்பு சாமான்கள் பழைய பெயிண்ட் டப்பாக்கள், பேப்பர்கள், பிளாஸ்டிக் சாமான்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள, மள என்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ நீண்ட நேரம் எரிந்தவாறே இருந்தது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News