உள்ளூர் செய்திகள்
அச்சரப்பாக்கம் அருகே வியாபாரி தற்கொலை
- வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
- தற்கொலை குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம்:
சித்தாமூரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது49). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை வீட்டில் இருந்து சென்ற அவர் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.