உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் ஊர்வலமாக சென்ற காட்சி.

மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள்

Published On 2023-07-12 13:37 IST   |   Update On 2023-07-12 13:37:00 IST
  • போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு-பரபரப்பு
  • 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்

செய்யாறு:

செய்யாறு மாங்கால் கூட் ரோடு பகுதியில் பெரிய அள விலான தொழிற்சாலைகள் செயல்படும் சிப்காட் தொழிற் பேட்டை அமைந்துள்ளது.

இந்த தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்ய அருகில் அமைந்துள்ள கிராமங்க ளான அத்தி, இளநீர்குன்றம், நர்மா பள்ளம், மேல்மா, தேத் துறை, குரும்பூர், வீரம்பாக்கம், வட ஆளப்பிறந்தான், நெடுங் கல் ஆகிய 9 ஊர்களில் சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தின் மூலம் நடந்தன.

இந்த நிலையில் விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி சிப் காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்தை நோக்கி ஆட்சேபனை மனு அளிப்பதற்காக டிராக்டர் களில் விவசாயிகள் அணிவ குத்து சென்றனர்.

அங்கு கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை யில் 274 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே டிராக்டர்களை போலீசார் தடுத்தனர். டிராக்டரில் இருந்து இறங்கிய விவசாயி கள் செய்யாறு கூட்டுறவு சர்க் கரை ஆலையில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் ஊர் வலமாக நடந்தே சென்றனர்.

திடீரென மாற்றுப்பாதை யில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர்.

அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் சமாதானத்தை ஏற்ற விவசாயிகள் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்றனர். பேரிகார்டுகள் அமைக்கப் பட்டு அலுவலகத்திற்குள் செல்ல முடியாத வகையில் போலீஸ் பாதுகாப்பு வளை யம் போடப்பட்டிருந்தது.

இதனை பார்த்த விவசாயிகள் மீண்டும் ஆவேசம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டு தர்ணா செய்தனர். அவர்களிடம் சிப்காட் விரி வாக்க மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் பேச்சு வார்த்தை நடத்தினார். அப் போது எங்களுடைய வாழ்வாதா ரத்தை பறிக்கும் தொழிற்சா லைகள் எங்களுக்கு தேவை யில்லை எனவும், கார்ப்ப ரேட் நிறுவன வளர்ச்சிக்காக எங்களுடைய வாழ்வாதார மான விவசாயத்தை அழித் திட வேண்டாம்" எனவும் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு வந்த செய் யாறு உதவி கலெக்டர் அனா மிகாவிடம், விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என பெண்கள் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இச்சம்பவத் தால் சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவல கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News