தமிழ்நாடு

ஆமதாபாத்- சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Published On 2025-02-02 09:25 IST   |   Update On 2025-02-02 09:25:00 IST
  • ஆமதாபாத் செல்லும் ரெயிலிலும் (20953) இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
  • ஏக்தா நகர் செல்லும் ரெயிலிலும் (20919) வருகிற 5-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (வண்டி எண்-20954), சென்டிரலில் இருந்து ஆமதாபாத் செல்லும் ரெயிலிலும் (20953) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.

அதே போல, குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (20920), சென்டிரலில் இருந்து ஏக்தா நகர் செல்லும் ரெயிலிலும் (20919) வருகிற 5-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News