மழை இல்லாததால் 120 அடியாக குறைந்த முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.27 அடியாக உள்ளது. 5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக குறைந்துள்ளது. 219 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2707 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 427 கனஅடி நீர் வருகிறது.
அணையின் நீர்மட்டம் 65.37 அடியாக உள்ளது. 4713 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.27 அடியாக உள்ளது. 5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.30 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.